Thursday, November 13, 2008

சட்டக் கல்லூரியா ? கொலைக் கல்லூரியா?


இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சட்டக் கல்லூரிக் கலவரங்களைப் பார்த்த எந்த ஒரு மனிதனும் காவல்துறையைத் திட்டாமல் இருந்திருக்க முடியாது. மனிதனுள் எந்த அளவு மிருகத்தன்மை இருக்கின்றது என்பதற்கு இது ஒரு அபாயமான எடுத்துக்காட்டு .

ஜாதி வெறி இன்றும் எந்த அளவு மாணவர்களிடையே ஆட்கொண்டுள்ளது என்று தெளிவாகத் தோலுரித்துக் காட்டிய கொடுமையான காட்சிகள் கண்டும் காணாமல் இருந்தா காவலர்கள் அனைவரையும் வேலை நீக்கம் செய்திருக்கவேண்டும் . செய்யாமல் விட்டது அரசு செய்த தவறு.
இவ்வாறு கலவரம் நடக்கப்போகிறது என்று முன்னமே கல்லூரி நிர்வாகத்திடம் அறிவித்ததாக காவல் துறை சொல்கிறது . அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று fallow செய்திருக்க வேண்டிய கடமையை ஏன் செய்யாமல் விட்டது..??

இந்த நிகழ்வை ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவு சாதி வெறி மனதில் ஊறி
இருக்கின்றது இன்றைய மாணவர்கள் மனதில் என்று பார்க்கும் பொழுது, பெரியார் சமூக நீதிக்காக உழைத்த உழைப்பு விழலுக்கு இழைத்த நீராய்ப் போனதோ என்ற ஐயப்பாடு என் மனதில் எழுகிறது. அவர் சொன்ன ஆதிக்க மனப்பான்மை மனோபாவத்தைக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் மட்டும் காட்டிவிட்டு, அமைதியாகி விட்டார்களோ என்ற ஐயம் எழுகிறது.

சட்டமேதை அம்பேத்கர் பெயரில் உள்ள அந்தக் கல்லூரியில் நடந்த கலவரம் கலைஞர் ஆட்சியில் ஒரு கரும்புள்ளி என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கலவரம் மேலும் மற்ற சட்டக் கல்லூரிகளுக்கும் பரவாமல் தடுத்து கலவரத்தில் ஈடுபட்ட இருதரப்பு மாணவர்கள் மீது தீவிர நடவடிக்கையை அரசுத்தரப்பு எடுக்காவிடில் எதிர்காலப் பிழையாய் போகும் .
அதற்குள் கோவை சட்டக் கல்லூரியில் கலவரம் நடக்க ஆரம்பித்து விட்டது.
இவ்வாறு மாணவர்கள் மனதில் நஞ்சு கலந்து விட்டு, எல்லோரும் சமத்துவம், சக்கரைபொங்கல் என்று பேசுவதில் பெரியார் மொழியில் சொன்னால் ஒருவெங்காயத்துக்கும் uthavaathu