Thursday, March 19, 2009

மோதலில் விழுந்தேன் 2 (அல்லது) மருத்துவமனை பயங்கரங்கள்.

வலக்கையைத் தூக்கவே முடியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் தான் இடது தோளில் ஏற்பட்ட சிறு முறிவு சரியாகி இருபது நாட்களாகத்தான் வண்டி ஓட்ட ஆரம்பித்திருந்தேன். இப்போது வலது கை...!!!

சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லை. எனது அலைபேசியை எடுத்துப் பேசலாம் என்றால், அது விழுந்த அதிர்ச்சியில் செயலிழந்து இருந்தது. பாழாய்ப் போன இந்த அலைபேசிகளால், எப்போதும் நினைவிலிருக்கும் எண்களெல்லாம் இப்போது நினைவுக்கே வருவதில்லை. பின்னர் ஒரு ஓரமாய் ஃபிளாட்பார்மில் அமர்ந்து இடது கையால், அலைபேசியைக் கழற்றி, பேட்டரியை வெளியில் எடுத்து மீண்டும் இணைத்து இயக்கினேன். நல்ல வேளை உடனே இணைப்பு கிடைத்தது. என் நெருங்கிய நண்பர் சங்கர் என்பவருக்கும், உடன் வேலை பார்க்கும் கணேஷ் என்ற நண்பருக்கும் அலைபேசியில் அழைத்து உடனே வரச் சொன்னேன். கண்டிப்பாகத் தெரிந்தது. எதோ எலும்பு முறிவு நிச்சயம் அது தோளிலா அல்லது மேல் கையிலா என்ற குழப்பம் மட்டுமே..!!!

அய்யோ மறுபடி மருத்துவமனையாஆஆஆ என்று மனது கேள்விகள் கேட்கத் தொடங்கியது...!!!

நண்பர் வந்தவுடன் அவரோடு அவரது வாகனத்திலேறி அருகில் இருக்கும் தி.நகரில் இருக்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம்..!!!

அங்கு ஆரம்ப கட்டப் பரிசோதனைகள் முடிந்து எலும்பு முறிவை மருத்துவர் உறுதி செய்தார்.

அங்குதான் பிரச்னைகளின் பூதாகரம் ஆரம்பித்தது...!!!! மெடிக்ளெய்ம் இன்ஸ்யூரன்ஸ் என்ற வடிவில்

தொடரும்

Wednesday, March 18, 2009

மோதலில் விழுந்தேன் 1 (அல்லது ) மருத்துவமனை பயங்கரங்கள் :)

நம்ம கலைஞர் தான் தினசரி தனது மருத்துவமனை அனுபவங்களை எழுதி தினகரனில் வெளிட்டு வருகிறார். சரி..!!!! நம்மளும் நம்ம மருத்துவமனை அனுபவங்களை வெளியிடுவோமேன்னு ஒரு ஃபீலிங்.

அதான் இப்போ என்னுடைய மருத்துவமனை அனுபவங்கள்.

முதலில்.....!!!!!!!!!!!!!!!!!

அந்த நாள்...............!!!!!!!!!!!!!!!!!!!!!! அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி...!!! என்னுடைய ரிலையன்ஸ் ஃப்ரெஷ் ஸ்டோரில் இரவு 7 மணிக்கு , திடீர்னு ஒரு ஆடிட்டர் வந்தார். கணக்கு வழக்குகளைப் பார்வையிட...!! சரின்னு பார்வையிடுங்கன்னு ஆரம்பித்த விடயம் போய்க்கிட்டே இருந்தது.............!!!!!!!!!!!!!! வேலை முடியும் போது நள்ளிரவு 2:30 மணி....!! சரின்னு வண்டியை (ஹீரோ ஹோண்டா சிடி டீலக்ஸ்) வீட்டுக்கு விரட்டினேன். சரியான தூக்கம்...!!! காலை 6 மணியிருக்கும்....!!! எனது மேலாளரிடமிருந்து அலைபேசி அழைப்பு..!!! சுரேஷ் 9 மணிக்கு மயிலாப்பூர் HOல மீட்டிங்..!! ஷார்ப்பா வந்துடுன்னு...!!!

நமக்கு தூக்கம் போச்சு...!! நான் வந்து படுத்ததே 3:30 மணிக்கு, இரண்டரை மணிநேரத்தில் அழைப்பு வந்த வுடன், கடமையைக் காரணம் காட்டி தூக்கத்தைத் தொலைத்தேன்.

எல்லாவேலைகளையும் முடித்து விட்டு, எனது ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனம் சென்று, தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்டு, ரிலையன்ஸின் தலைமை அலுவலகம் மயிலாப்பூர் நோக்கி எனது பைக்கில் புறப்பட்டேன்.............!!!!!!!!! மணி 8:40 AM.


மெதுவாக பரங்கிமலை ரெயில் நிறுத்தம் வந்து, இடப்புறம் திரும்பி, கிண்டி ஜி.எஸ்.டி சாலையில் திரும்பி, கிண்டி கத்திப்பாரா சந்திப்பு வந்து கிண்டி வழியாக அண்ணாசாலையில் என் பயணம் ஆரம்பித்தது. ஒரு ஐந்தே நிமிடத்தில் கிண்டி ரெயில்வே மேம்பாலம் வந்தது. அதில் எனது வண்டியைச் சற்று வேகமாக செலுத்தினேன். பாலம் இறங்கும் இடத்தில் இரண்டு நல்ல நண்பர்கள் சாலையைக் கடக்கும் நோக்கோடு, பாதைப் பிரிப்பான்(Divider) நின்று கொண்டிருந்தார்கள். சாலையைக் கடக்க முன் வருவதும், பின் மீண்டும் டிவைடரிடம் செல்வது, திருப்பிக் கடக்க முயற்சிப்பது என்றவாறே நின்று கொண்டிருந்தனர். நான் அவர்களைச் சரியாக கவனிக்காதது தான் எனது விபத்து நிலைக்குக் காரணமாகவும் இருக்கலாம்.

பாலத்தின் இறக்கத்தில், புவீயீர்ப்பு விசையின் காரணமோ, என் விதியின் காரணமோ எனது வண்டி சற்றே வேகத்துடன் இறங்கியது. அந்த நேரத்தில் மேற்சொன்ன நண்பர்கள் இருபுறமும் வாகனங்கள் வருவதை கவனியாமல், அதுவும் நான் சற்று வேகத்துடன் வருவதை அறியாமல் சட்டென்று சாலையைக் கடக்க முற்பட்டனர். கடைசி விநாடிகளில் அவர்கள் சாலையைக் கடப்பதை அறிந்து உடனே வண்டியை நிறுத்துவதற்காக இரண்டு ஃப்ரேக்குகளையும் ஒருசேரப் பிடித்தேன். விதி அங்கு தான் விளையாடியது...!!!!!!!!! வண்டி சரேலேனச் சாய்ந்து, டிவைடரின் சிமெண்ட் பகுதிக்கு இழுத்துச் சென்றது..!!! கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த சிமெண்ட் டிவைடரின் கற் கட்டிடத்தில் எனது வண்டியோடு சேர்ந்து மோதினே. கற்பகுதியில் எனது தோற்பட்டை பளீரென மோதியது.........!!!!!!!!!!!!!!!!!!!!!!

உயிர் போகும் வலி..!!!! சாலையைக் கடந்த நண்பர்கள், இந்த விபத்தைக் கண்டவுடன் பறந்தோடிப் போயினர்......!!!!!!!!!!! போக்குவரத்துப் போலிசாரின் உதவியுடன் வண்டியை ஓரமாக நிறுத்தி, பின் பார்த்தால் வலது தோளில் உயிர் போகும் வ்லி....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தொடரும்

Monday, March 16, 2009

தமிழ் சினிமாக் காமெடிங்ணா


தமிழ் சினிமாவுல நம்ம டாக்டர் விஜய் அளவுக்கு காமெடியா நடிக்கறவங்க யாருமில்லிங்ணா..!!! என்னடா இப்படிச் சொல்றேன்னு பாக்காதிங்ணா..!!

நம்ம கில்லி படம் வந்துச்சுங்களா..!!!?? நானும் எதாச்சும் கில்லி தாண்டு விளையாட்டு காமிய்ப்பாங்கன்னு பார்த்தேனுங்ணா..!!! ஆனா கபடி தானுங்ணா காமிக்கறாங்க..!!!

அதை விடுங்க...!!!!! அப்புறம் போக்கிரின்னு ஒரு படம் வந்துச்சுங்ணா...!! அதுல கூட ஹீரோ போலிஸா வருவாருன்னு சொன்னாங்ணா..!!

பார்த்தா யாரோ வாட்சுமேன் மாதிரில்ல கடைசியில் காமிக்றாங்ணா. நான் ரொம்ப நொந்துட்டேனுங்ணா.... ....!!!! ஆமாங்ணா...!!

மெய்யாலுமேங்ணா..!! அவரைப் பாத்தா போலீசுன்னு யாராச்சும் சொல்லுவாங்களாண்ணா???

அப்புறமுங்ணா அழகிய தமிழ் மகன் அப்படின்னு ஒரு படம் வந்துச்சுங்ணா...!!! நீங்க கூட பார்த்துருப்பிங்களே..!! அய்யோ..!! பாக்கலீங்களா..??? தப்பிச்சுட்டீங்கணா..!!!அதுலங்ணா அழகிய தமிழ் மகன் யாரு, யாருன்னு படம் முடியற வரைக்கும் தேடிப் பார்த்துட்டேனுங்ணா..!!! ஒருத்தரையும் காணோங்ணா..!! உங்களுக்காச்சும் தெரியுமான்னு கேக்கலாமுன்னு பார்த்தா நீங்க பாக்கலேன்னுட்டீங்கோ..!!!என்ன பண்றது நாம பெற்ற துன்பம், வையகத்துக்கு கிடக்காமப் போயிருச்சுன்னு என்ற மனசை ஆறுதல் படுத்திக்கிட்டேனுங்க...!!

இதெல்லாம் பரவால்லீங்ணா ..!!! லேட்டஸ்டா குருவி...!!!!!!!!, குருவி...!!! ன்னு ஒரு படம் வந்துச்சுங்ணா..!!! எதாச்சும் எங்கயாச்சும் உருவியாச்சும் படம் எடுத்துருப்பாங்கன்னு ஒரு நப்பாசையில் போயிட்டேனுங்க..!! குருவி படம் பார்க்க மக்களையே காணோமுங்ணா..!! சரி கெரவம் மக்களைக் காணோம், வேற யாராச்சும் ஸாரிங்ணா எதாச்சும் வருமான்னு பார்த்தேனுங்க....!!! நம்ம குருவியைப் பார்க்க ஒரு ஈ, காக்கா..!!!! கூட வரலீங்ணா..!!!!

அண்ணா ஒன்னு சொல்லிக்கிறேனுங்க..!! நான் சத்தியமா டாக்டர் விஜயைக் கிண்டல் பண்ணலீங்ணா...!!!!

உண்மையச் சொன்னேனுங்கோ..!! அம்புட்டுத்தேன்...!!!

Friday, March 13, 2009

இறுதிசவம் விழுவதற்குள்ளாவது

இந்தக் கட்டுரையை இணையத்தில் படித்திருக்கலாம். உங்களுக்கு மின்னஞ்சலில் கூட வந்திருக்கலாம். இருந்தாலும் என் ஆற்றாமையின் காரணமாகவே இதை மீண்டும் பதிகிறேன். ஈழத்தின் சகோதரிகளின் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருக்கும் இந்நேரத்தில், உணர்வற்ற மக்களில் சிலராவது இதைப் பார்த்துப் புரிந்து கொண்டார்கள் ஆனால் எனக்கு மகிழ்ச்சி...!! மனதைத் திடப் படுத்திக் கொண்டு படிக்கத் தயாராகுங்கள்...!!!!


அப்பாவையும் அக்கம் பக்க உறவுகளையும் காவு வாங்கிய சிங்கள ராணு வத்துக்கு எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாது காப்பு வளையம் என்கிற பெயரில் என் போன்றவர்களைப் பாடாகப் படுத்துகிறார்கள் ராணுவத்தினர். கொஞ்சம் அழகாகப் பிறந்த பாவத் துக்காக, நினைக்கும்போதெல்லாம் குதறப்பட்ட என் தோழி, இப்போது சித்தப்பிரமை பிடித்துக் கிடக்கிறாள். ஆனா லும், ஆடை கிழிக்கும் வேலை மிச்சமென நினைத்து பிரமை பிடித்தவளையும் பிறாண் டுகிறது ராணுவம்!''

-மனிதநேயமுள்ள மருத்துவர் ஒருவர் மூலமாக வெடித் திருக்கும் ஈழப்பெண்ணின்குரல்
, நெஞ்சையே நொறுக்கிப் போடுகிறது. ராணுவத்தை நம்பிப்போன அப்பாவித் தமிழ் மக்களின் மொத்த நிலைமையும் விவரமாகச் சொல்லி அதிர வைக்கிறார்கள் கொழும்பில் இருக்கும் பத்திரிகையாளர் சிலர்.

'புலிகளுடனான போரை நடத்தும்போதெல்லாம் ராணுவம் போடும் வெறியாட்டங்களைத் தமிழ் மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் ராணுவத் தரப்பினர், எவ்வளவோ வற்புறுத்தியும் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட்ட வளையப் பகுதிக்குச் செல்லவில்லை. இந்தக் கடுப்பில் கொத்து குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசி, மக்களை உயிர் பயத்தில் ஓடவைத்தது ராணுவம்.

இதனால் வேறு வழியில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தின் முகாம்களுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சோதனை முடிந்து அனுப்பப்படுபவர்களை பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என்று பிரிக்கிறார்கள். ஆண்களை யும், பெண்களையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக மாறிக்கிடக்கும் தமிழ் தலைவர்கள் சிலருடைய ஆதரவாளர்கள் விசாரிக்கிறார்கள். சந்தேகப்படும்படி அவர்கள் யாரையெல்லாம் குறித்துத் காட்டுகிறார்களோ... அவர்களுக்கெல்லாம் அடுத்த சில நிமிடங் களிலேயே முடிவு கட்டுகிறது ராணுவம்.

மக்களோடு மக்களாகப் புலிகள் ஊடுருவி கிளிநொச்சி, யாழ்ப்பாணப் பகுதிகளில் மரப்பொந்து களிலும் மண்ணுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் மூலமாக ராணுவம் மற்றும் சிங்கள அரசில் இருக்கும் முக்கிய ஆட்களைக் கொன்றுவிடுவார்களோ என்கிற அச்சத்தில்தான் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைவர்களை இந்த ஆராய்ச்சி வேலையில் இறக்கியிருக்கிறது ராணுவத் தரப்பு. இளைஞர்கள் எந்த விசாரணையும் இன்றியே ரகசிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். இளம்பெண்களின் நிலையைச் சொல்ல வேண்டியதே இல்லை. ராணுவத்தின் வல்லுறவுக்கு உடன்படாமல் வீம்பு காட்டும் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்நடத்தப்படுகிறது. அவர்களை சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்காமல் நடத்தப்படும் சித்ரவதைகளை ராணுவத்தில் இருக்கும் ஒன்றிரண்டு நேர்மையான அதிகாரிகளே மீடியாக்களிடம் சொல்லி வருந்தி இருக்கிறார்கள்.
இதற்கிடையில், தமிழ்ப் பெண்களை வற்புறுத்திப் புணர்வதைக்கூட இரக்கமேயில்லாமல் வீடியோ பதிவும் செய்கிறார்கள். இத்தகைய வீடியோ பதிவுகள் யாருக்கு எதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது மட்டும் புரியாத புதிராக இருக்கிறது. ராணுவ வீரர்கள் செய் வதைக் காட்டிலும், தமிழ்ப் பெண் களைப் பெரிய அளவில் சித்ரவதை செய்வது ராணுவத்தின் உளவுத் துறையில் இருக்கும் சிலர்தான்.

அவர்கள் தங்கள் முகாம்களில் எடுபிடி வேலைகள் செய்யவும், விரும்பும்போதெல்லாம் இச்சை களைத் தீர்த்துக்கொள்ளவும் இளம்பெண்களைப் பயன் படுத்துகிறார்கள். உளவுத் துறையின் வெறியாட்டத்துக்கு இரையாகி, பலியான பெண்களில் பலரும் எரிக்கப்பட்டு விடுகிறார்கள்.



உலக நாடுகளிடம், 'எங்களை நம்பி வந்த மக்களுக்குத் தரமான உணவும் மருந்துப் பொருட்களும் வழங்குகிறோம்!' என்று சொல்லும் சிங்கள அதிகாரிகள், உண்மையில் வெறித்தனத்தைத் தவிர, வேறெதையும் தமிழ் மக்களிடம் காட்டவில்லை. இத்தகைய கொடுமைகளை ராணுவம் செய்வது பற்றி சிங்கள மக்களுக்குக்கூடத் தெரியாது. மருத்துவர்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் மூலமாக வெளிவந்திருக்கும் இத்தகைய கொடூரங்கள், இரக்கமுள்ள சிங்கள மக்களிடமும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக் கிறது!'' என்கிற கொழும்பு பத்திரிகையாளர்கள்,

''தற்காலிக விடுப்பிலிருக்கும் ராணுவ வீரர்கள், இளம் பெண்களின் கற்பைச் சூறையாடி, அவர்களின் உறுப்புகளை அறுத்து எறியும் அவலமும் நடக்கிறது. வவுனியா மற்றும் விசுவமடு பகுதிகளில் இருக்கும் இடைத் தங்கல் முகாம்களில் தமிழ்ப் பெண்கள் எந்தளவுக்கு சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்று நேர்மையான ராணுவ அதிகாரிகளே எங்களிடம் சொல்கிறார்கள். ஐ.நா-வின் பிரதிநிதியாக அந்த டைத் தங்கல் முகாம்களுக்கு வந்த ஜான் கோல்ம்ஸின் கவனத்துக்கு அத்தகைய கொடூரங்கள் கொண்டு செல்லப்பட்டும், இலங்கையின் நிவாரண அமைச்சரான ரிஷாட், அதை திசைதிருப்பி, மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மறைத்துவிட்டார்...'' என்றார்கள்.

இதற்கிடையில், இந்திய பிரதமருக்கு ஈழப்பெண்களின் பரிதாபகரமான நிலை குறித்து தமிழ் தேசிய கூட்ட மைப்பைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் அவசரக் கடிதம் எழுதி யிருக்கிறார். அதில், ''வவுனியா மருத்துவமனையில் தமிழ் கர்ப்பிணிகளை வற்புறுத்திக் கருவைக் கலைக்கிறார்கள். இத்தகைய கொடுமைகளை அரங்கேற்றச் சொல்லி மருத்து வர்களையும் ராணுவம் மிரட்டுகிறது. மொத்தத்தில், தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து ராணுவம் நடத்தும் வெறியாட்டம், ஹிட்லர் காலத்தில்கூட நடக்காதது!'' என்று சொல்லவொண்ணா வேதனையோடு கலங்கி யிருக்கிறார்.

இறுதி சவம் விழுவதற்குள்ளாவது உலகத்தின் இரக்கப்பார்வை ஈழத்தின் பக்கம் விழுமா?

இந்தக் கட்டுரையைப் படித்த மாத்திரத்தில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருடைய இதயமும் துடித்திருக்கும். அதுவும் தமிழனாய்ப் பிறந்த ஒரே காரணத்துக்காக இனப் படுகொலை நடக்கும் இடங்களைப் பற்றிய படங்களும் , கட்டுரைகளும் , காணொளிப் படங்களும் வந்தும் இன்றைய தமிழக அரசியல்வாதிகள் பல்ர் அதை வியாபாரமாக்குவதிலேயே குறியாய் இருக்கின்ற அவல நிலை தான் உச்ச பட்சக் கொடுமை..!!

முத்துககுமார் முதலான இளைஞர்கள் தீக்குளித்து மாண்டாலும், மாணவர்கள் முதல் வழக்குரைஞர்கள் வரை ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற போராட்டத்தைத் தொட்ர்ந்து நடத்திய வண்ணம் இருந்தாலும், இன்றைய மாநில, மத்திய அரசுகள் வாளாவிருக்கின்றன்.

தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயே காங்கிரஸிக்கு கூஜா தூக்கும் புதிய தேர்தல் கமிஷனரின் ஆணைப் படி, ஈழப் பிரச்னை பற்றிப் பேசக் கூடாது என்று அறிவிப்பு வருகிறது.

மும்பை குண்டு வெடிப்பு பற்றிப் பேசக் கூடாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்ததா என்று தெரியவில்லை.

இதெற்கெல்லாம் ஒரே வழி ஆட்சி மாற்றமே. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்கள். அது போல் இந்தியாவில் நடக்கப்போகும் ஆட்சி மாற்றமே, சிங்களப் பேரினவாத ஆதிக்கத்தை அழிக்க உதவ வேண்டும். அது காங்கிரஸ் அரசுக்கு சம்மட்டி அடியாக வேண்டும் .

மௌனப் புரட்சியாய் வரும் தேர்தலை நம் தமிழக மக்கள் உருவாக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஓரிடத்தில் கூட வெற்றி பெறாமல் மண் கவ்வச் செய்ய வேண்டும்.

இது தான் இது நாள் வரை எந்தப் போராட்டங்களிலும் ஈடுபடாமல், ஆனால் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை உள்ள தமிழகச் சகோதர, சகோதரிகள் செய்யவேண்டியது......!!!!!!!!!!!!!!!!!!

i

Wednesday, March 11, 2009

என்னா அடி..???


இன்னிக்கு இந்தியா நியூசிலாந்து போட்டியை யாரு மறக்கறாங்களோ இல்லியோ, நியூசிலாந்து வீரர்கள் ஆயுளுக்கும் மறக்க மாட்டாங்க...!!!! என்னா அடி..!!! வீரேந்திர சேவக் ஆடிய ஆட்டம் இருக்கே, கொக்கமக்கா என்னமா போட்டு தாக்கினாப்ல்..!! பய புள்ளை கொஞ்சம் கூட இரக்கமில்லாம நியூசிலாந்து பயபுள்ளைகளை கொன்டெடுந்து, பென்டெடுத்து, பெடலடுத்துப் புட்டாப்ல..!!!!!

2 நாள் முன்னாடித் தான் நம்ம ஓல்ட் ஈரோ டெண்டுல்கர், திடீர்னு ரஜினி சந்திரமுகி ஹிட் குடுத்த மாதிரி, பழைய ஆட்டத்தை ஆடி அடங்கினாப்ல..!! அதுக்குள்ள இந்த சேவக் பய வெளுத்து வாங்கிட்டாப்ல.

நம்ம ஓட்டேரி நரி ஸாரிங்க வெட்டோரிக்கு நேரஞ்சரியில்ல போல...!!! மாறி மாறி இந்திய அணி அடிக்கற அடிக்கு, பெத்த புள்ளையைப் பாக்கற சந்தோசம் கூட முழுமையடையாமப் போச்சு. என்ன ஆச்சுப்பா இந்திய அணிக்கு..?? சோனி டீமா இருந்த அணி டோனி டீமா மாறினதும் வெற்றி குமியுதேப்பா..??


என்னடா இம்புட்டு நாளா, இந்திய அரசியல், ஈழப் பிரச்னை, கலைஞர், செயலலிதான்னு பேசிட்டு இருந்த பய, இந்த வீணாப் போன கிரிக்கெட்டைப் பத்திப் பேசறானேன்னு நம்ம பிளாக்கீஸ் எல்லாம் பாக்கறாங்க்ன்னு தெரியும்..!! இன்னா பண்றது..?? இன்னிக்கு நாயடி அடிச்ச சேவக்கை ஒரு ரசிகனாய்ப் பாராட்ட இந்த பக்கத்தை ஒரு சாக்கா வெச்சுகிட்டேன் அம்புட்டுத்தான்.

Tuesday, March 10, 2009

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே

ஈழத்தில் நடக்கும் படுகொலைகளை விட, இந்தத் தமிழ்நாட்டில் அரசியல் வியாபாரிகளான, அதிமுக, திமுக கூட்டங்கள் நடத்தும் ஜனநாயகப் படுகொலை நாடகங்கள் உச்சத்தை அடைந்து வருகின்றன.

ராமச்சந்திராவில் படுத்துக் கொண்டே ஒரு புதுப் பேரவையை ஆரம்பித்துத் தனி ஆவர்த்தனம் நடத்தினார் கலைஞர். ஒரு நாளும் இல்லாத திருநாளாய் ஈழத் தமிழர் துயரம் துடைக்க உண்ணாவிரதமிருக்கிறார் ஜெயலலிதா. எல்லாம் தேர்தல் என்னும் சாத்தான் செய்யும் வேலை.

போர் நடக்கும் போது பொதுமக்கள் இறப்பது சாதாரண விஷய்ம் தான் என்று பேசிய அம்மையாருக்குத் திடீரென ஈழத்தமிழர் மீது பாசம் பொத்துக் கொண்டு வந்த காரணமென்ன?? எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறைப்படி ஈழத்தமிழரைக் கொல்லும் வேலைக்கு விளக்குப் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு, சாமரம் வீசும் கலைஞரை எதிர்ப்பதற்காக உருவான தீடீர் ஈழப் பாசம்.
தமிழினத் தலைவர் என்று அழைத்துக் கொள்பவரே ஈழ விஷயத்தில் வாளாவிருக்கின்றார். பதவி என்ற உணர்வு, தமிழுணர்வை அடித்துச் சாப்பிட்டு விட்டது. ஸ்பெக்ட்ரம் க்தைகளால், இன உணர்வு மரத்துப் போய் விட்டது.

என் சகோதரர்கள் அங்கே அடிபட்டுக்கொண்டும், மிதிபட்டுக் கொண்டும் சாகக் கிடக்கிறார்கள். அந்த உணர்வை வைத்துக் கொண்டு இங்கு அரசியல் நடத்திக் காசு பார்க்கும் கூட்டமாகத்தான் தமிழக அரசியல் வியாதிகள் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கலைஞர் வசூல் செய்த பணம் எங்கு , எப்படி ஈழத் தமிழரைப் போய்ச் சேர்ந்தது என்று ஆர்ப்பாட்டம் செய்த அம்மையார், இன்று நிதி வசூல் செய்கிறார், அதே ஈழத் தமிழரைக் காக்க...!! கேட்பவன் கேனையாய் இருந்தால் கேப்பையில் நெய் ஒழுகும் என்பார்களே அது போல...!!!!


இத் தமிழ்நாட்டின் சாபக் கேடு இது....!!!!