Sunday, October 12, 2008

இன்னும் எத்தனை காலத்துக்கு மௌனம்?

கண்ணீர்த் துளி தேசத்தில் என்றும் கண்ணீர்த்துளி

வெந்நீர் ஊற்ற உதவும் தேசமாய் நாம்..??

செந்நீர் சிந்தும் சகோதரனுக்கு உதவ மனமில்லை

புண்ணாகிப் போன மனதவனுக்கு

மண்ணாகிப் போன வாழ்க்கை மீண்டும் கிடைக்க

பொன்னான தேசம் அமைதி திரும்ப

என்ன கேட்கப் போகிறான் அவன்..??

உதவி செய்யச் சொல்லவில்லை.-- அவனுக்கு

உதவி செய்யாதே என்று தாம் சொல்கிறோம்

விண்ணிலும், மண்ணிலும் நீரிலும் சிறந்த

கண்ணியமிக்க வீரர்களைக் காவு கொடுக்க

என்னுடைய சகோதரனை பலிகடாவாக்காதே..!!

ராச பக்சேக்களின் உதிர வெறிக்கு

ராச்சியம் அமைக்கவுதவும் மன்னுமோகன்கள்

பதவி என்பது துண்டு என்றவரும், இன்று

பதவித்துண்டுக்காய் பறக்கும் அவலம்

உணர்வுள்ளவரே உதவாத போது -

உணர்வற்ற அம்மைகளிடம் எப்படி எதிர்பார்ப்போம்

உணர்வான மக்களே ஒன்று சேர்வோம்

உடன்பிறப்புக்களுக்கு உதவுவோம்