Thursday, January 15, 2009

நம்மால் முடியும்


நம்மால் முடியும் என்ற வார்த்தையே நம்பிக்கையின் ஒளிக்கீற்று . அதைத் தாரகமாகக் கொண்டு இயங்கும் இயக்கம் தான் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்திஅவர்களின் மக்கள் சக்தி இயக்கம் . அதை அவர்கள் சொல்லும் விதமே மிக அழகாக இருக்கும். இது ஒரு சாதரண சமூக இயக்கமோ, அல்லது அரசியல் இயக்கமோ அல்ல. நல்லதொரு "சமூக மாற்றத்துக்கான அரசியல் இயக்கம்"என்று தான் கூறுவார்கள்.


நம் இயக்கத்தில் பல நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இணைந்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சமூக மாற்றத்துக்கான ஒரு பரந்து பட்டு விரிந்த கனவு ஒன்று இருக்கிறது. சமூகச் சிந்தனையுள்ள ஒரு இளைஞர் கூட்டம் பலவித கனவுகளுடன் இதை முன்நடத்திச் சென்று கொண்டிருக்கிறது.
"
மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தும் , மக்களை அதிகாரப்படுதும் அரசியலை முன்னிறுத்திச் " செல்லும்
இயக்கமாக அது வளர்ந்து கொண்டிருக்கிறது. டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பெயரில் பலவித சமூக முன்னேற்றத்துக்கான பணிகளை அவர்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள். இந்த அருமையான இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.

1988ம் ஆண்டு திரு. எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம், "சுயமுன்னேற்றம், சுயபொருளாதார முன்னேற்றம் சமூக ஈடுபாடு போன்ற தனி மனித உயர்விற்கான லட்சியங்களையும், நதிநீர் இணைப்பு, கிராம வேள்வி, புதிய கல்வித்திட்டம் போன்ற சமூக முன்னேற்றத் திட்டங்களை முன்னிறுத்தி ஒரு அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக விளங்கியது.
இரண்டு ஆண்டுகளாக இயக்க நிறுவனர் டாக்டர். திரு, எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களது வழிகாட்டுதலுடன், இயக்க முன்னோடிகளின் ஆதரவுடனும் முழுக்க முழுக்க இளைஞர்களாலேயே நடத்தப் பட்டு வருகிறது. முழுநேர நிர்வாகிகளாக, பல்வேறு தளங்களில் பணியாற்றிய இளைஞர்கள் இணைந்து, கொள்கை வகுப்பது திட்டமிடுவது மற்றும் செயல் படுத்துவது என எதிர்காலத் தூண்களான இளைஞர்களே பார்த்துக் கொள்கிறார்கள்.
மக்கள் சக்தி இயக்கத்திலிருந்து "நம்மால் முடியும்" என்ற சமூக மாற்றத்திற்கான பத்திரிகை ஒன்று மாதம் ஒருமுறை வந்து கொண்டிருக்கிறது. இதை அனைத்துப் பக்கத்திலும் நிர்வகிப்பது இளைஞர்களே...!!!!