Monday, June 19, 2017

நதியோரம்_சதிநேரம்-10

#ரூடைல்(#Rutil) என்ற Sathiya Vaniயின் வார்த்தைகளைக் கேட்ட ஆனந்த்குமார்வெங்கடேஷ் முகத்தில் அதிர்வு ரேகைகள் காட்டினர்! ஆனந்த் , சத்யா, அன் Parthi இந்த விஷயத்தை வெளியில் தெரிய வேண்டாம் ! இது பற்றிய எல்லாமே ரகசிய விசாரணையில் இருக்கு என்றார் ! இருவரும் ஒன்றும் பேசாமல் தலையாட்டினர் !
ஆனந்த் , கமிஷனர் இரண்டு பேரும் வெளியே வந்தனர் ! ஆனந்த் கமிஷனரிடம் சார் ! விஷயம் சாதாரண மணல் திருட்டு மட்டும் இல்லை சார் ! அதுக்கு மேலேயே போயிட்டு இருக்கு ! ரூடைல் என்பது பத்தி ! தெரியும் இல்லையா சார்!? என்றார் !
வெங்கடேஷ் எஸ் ! கொஞ்சம், கொஞ்சம், !! இது ஒரு விதமான கனிமம் ! கடல் மணலில் கிடைக்கும் ஒரு தாது ! ஆம் ஐ கரெக்ட் ஆனந்த் ? என்றார்
எக்ஸாக்ட்லி சார் ! இது மட்டும் அல்ல, #கார்னெட்#இலுமனைட்#ஜிர்கான் அப்படின்னு நிறைய கனிமங்கள் கடல் மணலில் கலந்து இருக்கு ! உங்களுக்குத் தெரியாதது இல்ல !
கன்னியாகுமரி, தூத்துக் குடி கடலோரத்தில் அந்தக் கனிமவளங்களைச் சுரண்டிட்டு கைலாஷ்ராஜன்னு ஒரு பெரிய மாஃபியா அரசாங்கங்களைக் கைக்குள்ள வச்சுட்டு வியாபாரம் பண்ணிட்டு இருக்காரே ! ஆனால் இது ஆற்று மணல் !
இதுல எங்கே ரூடைல் வந்தது !? அதான் தெளிவு படுத்தனும் !
எனக்கு இன்னொரு முறை அந்த வரதராஜபுரம் வரை போகணும்னு தோணுது சார் ! அங்கே ஊருக்குள்ள கொஞ்சம் விசாரிக்கணும் ! தேர் வி கேன் கெட் ஸம் டீடெய்ல்ஸ் !
ஓகே ! ஆனந்த் ! கோ அஹெட் ! யூ கேன் கால் மீ ஃபார் எனி ரெஃப்ரென்ஸ் ஆர் ஹெல்ப் ! உங்களுக்கு ஹெல்ப் பண்ண ஒரு நியூ Enthusiastic எஸ்.ஐ ஒருத்தரை அனுப்பறேன் ! ஆல் தி பெஸ்ட் என்றார் வெங்கடேஷ் !
அருணாச்சலமுடைய பங்களா பரபரப்பாக இருந்தது ! Valli Dpiஅங்கிருக்கும் ஆட்களிடம் கத்திக் கொண்டிருந்தான் ! எப்படிய்யா அய்யா காணமப் போவாரு ? நான் அடுத்த ரூம்ல தான் படுத்து இருக்கேன் ! வெளியில் பூட்டி சாவி நீங்க தான் வச்சு இருக்கிங்க ! எப்படிய்யா காணமப் போவாரு ? என்றான் பதற்றமாக !
வெளியே இருந்த இரண்டு கான்ஸ்டபிள்களிடமும் என்ன சார் ஆச்சு !? இதுக்குத்தான் பாதுகாப்பா, என்றான் ! இரண்டு கான்ஸ்டபிள்களும், வள்ளி நாங்க வெளில தான் இருந்தோம் ! எப்படின்னு தெரியலை ! என்றார்கள் !
அந்நேரம் ஒருவன் பதறிக் கொண்டு ஓடி வந்தான் ! முகமெங்கும் பீதியில் வெளுத்து இருந்தது ! அய்யோ ! அய்யோ ! என்று கதறியபடி வந்து அய்யோ அங்கே குவாரில ........... ! குவாரில...... என்று முடிக்காமல் மூச்சிரைத்தான் ! வள்ளி அவனை ஆசுவாசப் படுத்தி என்ன ஆச்சு மாரி ? தண்ணி குடிடே என்று அமர்த்தினான் !
அங்கே அங்கே அய்யாவை.....!!! அய்யாவை என்று மயங்கிச் சரிந்தான்!
அப்போது அந்த போலீஸ் ஜீப் அந்த காம்பவுண்டுக்குள் நுழைந்தது!
தொடரும் 10

Tuesday, June 13, 2017

நதியோரம் சதி நேரம்-9

தலைகீழாய்த் தொங்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த Kandan Mks ! அனிதாவின் அலறலைக் கேட்டுக் கீழே இறங்கினார் !
ஆறடிக்குச் சற்றுக் குறைவாக இருந்தார் ! அணிந்திருந்த அடர் நீல டி சர்ட் / வெளீர் நீல ஜீன்ஸ் கச்சிதமாக உடலில் அமர்ந்து இருந்தது ! நீண்டு திரண்டு முறுக்கேறிய கைகளும், அகன்ற விரல்களும்
அவர் ஜிம் வொர்க் அவுட் டை பறை சாற்றின ! குறும்பு கொப்பளிக்கும் கண்களும், அழகாய் வரிசையாய் அமைந்திட்ட பல்வரிசையும், சற்று அடர்ந்து மெல்லக் கீழிறங்கிய மீசையும், மழுக்க ஷேவ் செய்த கன்னங்களும் பார்க்கும் பெண்களை திரும்பிப் பார்க்க வைக்கும் மந்தகாசப் புன்னகையோடு சிரித்தார் எம்கேஎஸ்!

ஏன் சார் ! எப்ப பார்த்தாலும் இப்படி பயமுறுத்தறதே வேலையா இருக்கீங்க என்றாள் ! எம்கேஎஸ் சிரித்துக் கொண்டே நீ இருக்கறது டிடெக்டிவ் ஏஜென்ஸிம்மா ! என்னவோ ரெக்கார்டிங் தியேட்டர் மாதிரி கத்திட்டே இருக்கியே என்றார்!
பட்டு ! இன்னிக்கு நமக்கு ஒரு புது க்ளெயன்ட் வந்துருக்கார் ! அவர் பேரு Kalidass ! அவர் நம்மளை மீட் பண்ண டைம் கேட்டு இருக்கார் ! நீ , டீடெய்ல்ஸ் ரெடி பண்ணு என்றார்!
பட்டு எம்கேஎஸ்ஸிடம் சார் ! இந்த முறை நல்ல அரேபியன் ஹட்ல மீட் பண்ணலாம் சார் ! ஓஎம்ஆர்ல புதுசா ஒன்னு திறந்திருக்காங்களாம் சார் என்றான்!
Barbeque Nation கூட ஓஎம்ஆர்ல இருக்கே என்றாள் அனிதா !
வெய்ட் ! எந்த இடம்னு டிஸைட் பண்ணி இவருக்கு இன்ஃபர்மேஷன் கொடுங்க , நோட் டவுன் த நம்பர் என்றார் !

ஒரு பத்து நிமிடம் கழித்து பட்டு ! சார் இடம் ஃபிக்ஸ் பண்ணிட்டேன் ! ஓஎம் ஆர் பார்பிக் நேஷன் ! நமக்கு ஃபோன் பண்ணினது காளிதாஸ் ! அமைச்சர் எஸ்டிஎம்மோட வலது கை ! அமைச்சருக்கு நம்மால எதோ காரியம் ஆக வேண்டியிருக்குன்னு நினைக்கிறேன் பாஸ் ! என்றான் !
எம்கே எஸ் லேப்டாப் பார்த்துக் கொண்டே 2 நாள் முன்னாடி தான் பிறந்தநாள் கொண்டாடி இருக்கார் ! அடுத்த முதல்வர் கேன்டிடேட் அவர்தான்னு பேச்சு அடிபடுது ! நம்மளைத் தேடறார்னா அது முக்கியமான எதோ விஷயமாத்தான் இருக்கும் என்றார் !
பட்டு மெதுவாக அவரோட தல விதி அப்படின்னா நாம என்ன பண்றது ? என்றான் முணுமுணுப்பாக! அருகில் இருந்த அனிதா க்ளுக் என்று சிரித்தாள்!

விதியும் சிரித்தது !

#OMR
சென்னையின் பிரதான ஐடி ஏரியா!

சாலையின் இரு புறங்களும் பிரமாண்டமான கட்டிடங்களும், பெரிய பெரிய ரெஸ்டாரென்ட்களும், சிறிய அளவில் ஆந்திரா மெஸ்களும், க்ரீன் ட்ரென்ட்ஸ், நேச்சுரல் பார்லர்களும், ஜூஸ் சென்டர்களும், சிறிய தள்ளு வண்டிக் கடைகளும்,சிறிதும் பெரிதுமாய் பல கார்களும், அதி நவீன பைக் களும், முழுக்க ஏசி செய்யப் பட்ட வோல்வோ பேருந்துகளும், கோல்ஃப் சென்டரும், மால்களும், பெரிய சூப்பர் மார்க்கெட்களும் இவர்களோடு பல அழகான, சுமாரான, சூப்பரான, பெண்களும், ஆண்களும் அடையாள அட்டை சுமந்த கழுத்துப் பட்டைகளோடு எப்போதும் பரபரப்பாகவே உலாவும் இன்னொரு உலகம்!

அந்த ஹோண்டா சிட்டி கார் மெல்ல துரைப் பாக்கம் ரேடியல் சாலையைக் கடந்து மெல்ல சச்சின் கா தாபா என்ற பெரிய போர்டு அருகே நின்றது !
Kalidass டிரைவர் சீட் விட்டு இறங்கினான் !

நாம் ஏற்கனவே காளியைப் பார்த்திருக்கிறோம்!

அன்று Sumiயை எஸ்டிஎம் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததால் இவரை சரியாகப் பார்க்க வில்லை !
ஐந்தரை அடி உயரத்தில் கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை என்ற இப்போதைய நவீன அரசியல்வாதியின் ஆஸ்தான உடையை அணிந்திருந்தான்! சட்டையின் உள்ளே தெரிந்த கனமான் செயினும், கையில் அணிந்திருந்த தங்கக் காப்பும் தங்கள் பகட்டைப் பறை சாற்றின ! மீசையற்ற முகத்தில் நான்கு நாட்கள் தாடி பறிக்கப் படா புற்களை போல் வளர்ந்திருந்தது ! இடது நெற்றியின் குறுக்காக இருந்த நீண்ட தழும்பு, அவனது அடிதடிக்கு அடையாளச் சின்னமாய் இருந்தது ! சற்றே சிகப்பேறிய விழிகள் அவன் அருந்திய பழரசத்தின் கதை சொல்லின ! சற்றே கருத்திருந்த தன் உதடுகளை நாவால் அடிக்கடி தடவி ஈரப் படுத்தி கொண்டிருந்தான்!


அருகிலிருக்கும் பெட்டிக் கடையில் சென்று பூமர் ஒன்றை வாங்கிக் கொண்டு மெல்ல சச்சின் தாபா உள்ளே சென்றான் ! இரண்டு பக்கமும் பார்த்துக் கொண்டு நடக்கையில் எதிரே வந்தவர் மீது மோதி
பூமரைக் கீழே தவற விட்டான் ! பர்தா போட்ட அந்த உருவம் ஸாரி சார் ! பூமரை மிஸ் பண்ணிட்டிங்க என்று கையில் திணித்தது ! காளியும் ஸாரி மேடம் என்று சொல்லிக் கொண்டே கையைத் திறந்தான் ! சிறிய பேப்பர் துண்டில் சத்யபாமா காலேஜ் எதிர்புறம் என்று கிறுக்கலான எழுத்தில் எழுதியிருந்தது ! எதிரே அந்த பர்தா உருவம் இல்லை !

காளி அதைப் பார்த்து வேகமாக வெளியில் ஓடி வந்தான் ! இரண்டு புறமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பர்தா அணிந்த யாரையும் காண வில்லை !

என்ன செய்வது ? சச்சின் தாபா தானே வரச் சொன்னாங்க ! இப்போ சத்யபாமா காலேஜ் எதிரில்னு சொல்றாங்களே ! சரி போய் பார்ப்போம் என்று வண்டியில் ஏறி கிளம்பினான்!
மெல்ல வேகமெடுத்து ஐந்தாறு சிக்னல்களைக் கடந்து சத்யபாமா காலேஜ் எதிரே இருக்கும் சர்வீஸ் ரோட் உள்ளே செலுத்தி ஒரு டீக்கடை அருகே நிறுத்தினான் ! தன் மொபைலை எடுத்து எம்கேஎஸ் எண்ணை அழுத்தினான் ! நீங்கள் டயல் செய்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டுள்ளது என்று சொன்னது!
வெறுப்பாகி மொபைலைப் பையில் வைத்த அருகே ஒருவர் வந்து சார் இந்த அட்ரஸ் எங்கே இருக்குன்னு தெரியுமா என்று கேட்டார் ! ஹலோ நானும் இந்த ஏரியா கிடையாது வேற யார் கிட்டயாச்சும் கேளுங்க என்றான் !
சார் ! ப்ளீஸ் நல்லா பார்த்துச் சொல்லுங்க என்றார் அவர் ! அவர் காண்பித்த சிறு துண்டு பேப்பரில் come to பார்பிக் நேஷன், என்று இருந்தது !
பார்த்து விட்டு சட்டென்று நிமிர்ந்து பார்த்தால் அவரைக் காண வில்லை !

என்னங்கடா இது ? ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியைப் பார்க்க வந்தால் இந்த ட்ராஃபிக்கில் இவ்ளோ சுத்த விடறாங்க ! என்று மறுபடி வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்து யூ டர்ன் அடித்து திரும்பினான்!

#Barbeque_Nation மதியம் 11/2 மணியாததாலால் கணிப்பொறியாளர்களால் நிறைந்திருந்தது ! சுற்றி சுற்றி வந்ததால் சற்றே டென்சனாய் இருந்த காளியை அங்கே காத்திருப்போர் பட்டியலில் அமர வைக்கப் பட்டான்! வாட்சைப் பார்த்துக் கொண்டே வாசலையும் பார்த்துக் கொண்டேயிருந்த காளியை அருகிலிருந்து மிஸ்டர் காளி ! ஐ ஆம் பட்டு ஃப்ரம் விஎம்டிஏ ! தயவு செய்து திரும்பிப் பார்க்காதிங்க ! உங்களுக்கு டேபிள் 7 புக் ஆகியிருக்கு ! கேஷுவலா எழுந்து அங்கே போய் உட்காருங்க,! என் பாஸ் உங்களை அங்கே சந்திப்பார் என்றான் !
காளி திரும்பிப் பார்த்தான் ! ஒருவன் தன் காதுகளில் இயர் ஃபோன் அணிந்து கொண்டு டேப்லட்டில் முகத்தைப் புதைத்திருந்தான்! சுற்றி இருப்பவர்களில் யாராக இருக்கக் கூடும் என்று குழம்பி மெல்ல உள்ளே சென்றான் ! டேபிள் 7 ரிசர்வ்டு என்றான் பேரரிடம் ! டேபிளில் அமர்ந்தான் ! மெனு கார்டைப் பார்த்த படி இருந்தவன் அருகே வந்து அமர்ந்தார் அந்தப் பெரியவர் !
காளி பார்த்து சார் ! இது அல்ரெடி ரிசர்வ்ட் ! என்றான் ! அவர் கையமர்த்தி நான் எம்கேஎஸ் ! உங்களை 3 மணி நேரமாய் ஒரு பைக்கும், ஒரு காரும் ஃபாலோ பண்றாங்க ! அதைக் கன்ஃபார்ம் பண்ணத் தான் உங்களைச் சுத்த விட்டேன் ! இப்போ நான் எழுந்து எதிர் டேபிள் போயிறேன் ! உங்க ஃபோனுக்கு கால் வரும் அதுல பேசுங்க என்று வேகமாய்க் கூறி விட்டு சத்த்மாய் ஸாரி ஸார் ! தவறாய் உட்கார்ந்து விட்டேன் என்று சொல்லி எதிர் டேபிளில் சென்று அமர்ந்தார் !

காளிக்கு என்ன நடந்தது என்று புரியவே சிறிது நேரம் பிடித்தது ! அப்போது கை பேசி அழைத்தது ! இயக்கிப் பையில் வைத்துக் கொண்டு, ஹேண்ட்ஸ்ஃப்ரியாக வயர்களைக் காதுக்குப் பொருத்தி பேசத் தயாரானான்!

மறுமுனையில் இருந்து அமைச்சர் எஸ்டிஎம் முக்கு வந்த பார்சலில் என்ன இருந்ததுன்னு சொல்லுங்க காளி என்றார் எம்கேஎஸ் !

காளி திகைத்தான் ! வியர்த்தான் !

தொடரும் 9

நதியோரம் சதிநேரம் 8

இரவு ..!!! நிலவு பூத்த இரவு ! இத்தனை பிரச்னைகளின் மூல காரணமான ஆரவல்லி நதியில் ஓடை போல் ஓடிக் கொண்டிருந்த நீரில் நிலவின் ஒளி பட்டு இன்னொரு வெளிச்சக் கீற்றைப் பறை சாற்றிக் கொண்டிருந்தது ! இரண்டு கொலைகளைப் பார்த்திருந்த அதன் இரு கரைகளும் எதும் நடக்காததைப் போல் இல்லாத காற்றைத் தேடி வரவழைக்க தன் மரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தன ! அசைவேனா பார் என்று மரங்களும் அடையாள வேலை நிறுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு அடர் கோடை இரவு !
சரக் ! சரக் ! என்ற சருகுகள் மிதி படும் ஓசை கேட்டது ! அந்தக் கரையின் அடர்ந்த விழுதுகள் கொண்ட ஆலமரத்தின் மறைவில் இருந்து #அவன் வெளிப் பட்டான் !
முழுக்க முழுக்க கருப்பு உடைகள் அணிந்திருந்தான் ! முகம் முழுதும் மறைத்தார் போல் ஒரு தொப்பி அணிந்திருந்தான் ! மெல்ல ஊரை நோக்கிய பாதையில் நடக்க ஆரம்பித்தான் ! ஊரடங்கிய பின் இரவில் அவனை எதிர்கொள்ள ஊரின் நாய்கள் மட்டுமே காத்திருந்தன ! அந்தத் தெருவிற்கு வந்தான் !
மெல்ல அந்த மாளிகை போன்ற வீட்டிற்கு சற்று
தொலைவில் நின்று கவனித்தான் !
அந்த வீட்டுக்குப் பாதுகாவலாய் போடப் பட்டிருந்த இரண்டு காவலர்களும் கடமையே கண்ணாய்க் கண்ணயர்ந்திருந்தனர் ! அவர்களின் கட்டிலின் அடியில் இருந்த காலி பாட்டில்கள் அவர்கள் வெறும் தூக்கத்தில் மட்டும் இல்லை என்று காட்டிக் கொடுத்தன ! அந்த வீட்டின் பின் புறம் சென்றான் ! 10 அடி உயர காம்பவுண்ட் சுவரின் அருகே சென்றான் ! தனது இடுப்பில் சுற்றியிருந்த கயிறை உருவி அதன் முனையில் இருந்த கொக்கியை உள்ளே இருந்த மரத்தைக் குறி வைத்து வீசினான் ! சர் சர் சர்ரென்று மெல்லிய சத்தத்தோடு அந்தக் கொக்கி அங்கிருந்த மரத்தின் கிளையில் மாட்டிக் கொண்டு சுமக்கத் தயார் என்று அறிவித்தது ! அந்தக் கயிறை மெல்ல இழுத்து உறுதி செய்து கொண்டு சட்டென்று ஏறி அதன் அடுத்த பக்கம் குதித்தான் !
அடுத்து அவன் சுண்டிய லாகவமான சுண்டலில் கொக்கி மரக் கிளையில் இருந்து நழுவி இவன் கைகளில் அடக்கமானது ! மெல்ல நடக்க ஆரம்பித்தான் !
ஹெஹெஹெ என்ற மூச்சிரைக்கும் சத்தம் கேட்டு மெல்ல நின்றான் !
அந்த மங்கிய நிலவொளியில் திடீரென்று இரண்டு நட்சத்திரம் போன்ற வெளிச்சப் புள்ளிகள் தோன்றின, அது நான்காகி எட்டாகின !
ஹெஹெஹெ என்ற மூச்சுச் சத்தம் இப்போது அதிகமாகி அவனைச் சுற்றிக் கேட்டது !
அவை
.
.
.
.நான்கு டாபர்மென் வகை நாய்கள் ! கிட்டத் தட்ட 3 .
.
அடி உயரத்தில் அவனைச் சுற்றி நின்றன !
.
.
.
.
அவன் மெல்ல தான் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றினான் !
.
.
.
.
.
.
மெல்ல அமர்ந்து அந்த நாய்களின் தலையைத் தடவினான் ! மெல்ல மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவை போல் அவை நான்கும் அவனருகில் தாவின ! அவற்றைத் தடவிக் கொடுத்துக் கொண்டே, தன் பையில் கை விட்டு அந்த பெடிக்ரி ஸ்டிக் அடங்கிய பையை எடுத்தான் ! அவற்றை அந்த நாய்களுக்குக் கொடுத்தான் ! சற்று நேரத்தில் அவை மயங்கி விழுந்தன ! நான்கு நாய்களையும் அநாயசமாகத் தூக்கி அங்கிருந்த மரத்தின் அருகில் போட்டான் ! மெல்ல நடுவே இருந்த வீட்டை அடைந்தான் ! வெளியே கிட்டத் தட்ட ஆறேழு அடியாட்கள் போன்றவர்கள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர் !
அவன் முகத்தில் ஒரு சிறிய புன்னகை எழுந்தது !
அவர்களில் ஒருவனை நெருங்கி அவனது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு அந்தச் சாவிக் கொத்தை எடுத்துக் கொண்டான் ! ஒரு சாவியைத் தேர்ந்தெடுத்து அந்தத் துளையில் பொருத்தினான் ! க்ளிக் என்று திறந்து கொண்டது !
உள்ளே நுழைந்தான் ! சற்றும் காத்திராமல் அருகில் இருந்த படிகளில் ஏறினான் ! மேல் சென்று அந்த இரண்டாவது அறையை மெல்ல அழுத்தினான் ! திறந்து கொண்டது ! மெல்லிய இரவு விளக்கு வெளிச்சத்தில் ஏசியின் அடர்ந்த குளிரின் நடுவே கழுத்து வரை போர்வையோடு அருணாச்சலம் உறங்கிக் கொண்டிருந்தார் ! அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவனது கண்களில் வெறி வந்து அடங்கியது ! தன் பைகளில் கை விட்டு அந்த ஸ்பிரேயை எடுத்து அதன் மூடியை அகற்றினான் ! அருணாச்சலம் அருகே சென்றான் ! தன் முகத்தை ஒரு பெரிய கர்சீப்பால் மூடிக் கொண்டான் ! அவரது அருகில் அமர்ந்தான் ! ஒரு கையால் அவரது வாயை அழுத்தி மூடிக் கொண்டு மூக்கருகில் அந்த ஸ்பிரேயைப் பாய்ச்சினான் ! ஒரு நிமிடம் அமைதியாக இருந்து விட்டு ! அந்தப் போர்வையை அகற்றி, அருணாச்சலத்தைத் தன் தோள்களில் மிக எளிதாகத் தூக்கிப் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்! மெல்லப் படிகளில் இறங்கி, கதவைப் பூட்டி அவரை ஒரு ஓரமாய் இறக்கி வைத்து விட்டு, அந்தச் சாவிக் கொத்தை மீண்டும் அந்த ஆள் பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு அருணாச்சலத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டின் பின் புறம் விரைந்தான் ! காம்பவுண்ட் சுவர் அருகே வந்து தன் வாயைக் குவித்து மெல்லிய ஓசை செய்தான் ! பின் வாசல் கதவு திறந்தது ! அங்கே இன்னொரு ஆசாமி நின்று கொண்டிருந்தான் ! பின் வாசல் கதவை மீண்டும் பூட்டி விட்டு இருவரும் அருணாச்சலத்தை சுமந்து அங்கே ஓரமாய் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காரில் ஏற்றினார்கள் ! பின்னர் அந்தக் கார் மெல்ல நகர்ந்து ஒரு வெளிச்சப் புள்ளியாகி மறைந்தது
தொடரும் 8

நதியோரம்_சதிநேரம் 7

வெங்கடேஷ் ஆறுமுகம் ஆனந்த்குமார்ஐப் பார்த்து வெல் செட் ஆனந்த் ! அமரேந்திரன் கருப்பு ஆடுன்னு எப்படிக் கண்டு பிடிச்சிங்க ? உங்களைப் பத்தியும் உங்க ஸ்பெஷல் அஸைன்மென்ட் பத்தியும் டிஜிபி முன்னாடியே சொன்னாலும், உங்க சுதந்திரத்துல தலையிடக் கூடாதுன்னு தான் நான் கான்டாக்ட் பண்ணலை ! ஆனா இன்னிக்கு இந்தக் கொலைகள்னால உங்களை நீங்க வெளிப்படுத்திக்க வேண்டியதாயிடுச்சு இல்லையா என்றார் !
ஆனந்த் புன்னகைத்தார் ! இந்த விஷயம் நமக்குள்ள தானே சார் தெரியும் ! அமரேந்திரனை நம்ம ஸ்பெஷல் கஸ்டடில வச்சிருக்கோம் ! இன்னும் சில உண்மைகள் தெரிய வேண்டியிருக்கு ! அதுக்கு முன்னாடி இந்தக் கொலைகள் !
If you don't mind இந்த ப்ராஜெக்ட் பத்தி என் கிட்ட டிஸ்கஸ் பண்ணலாமா என்றார் வெங்கட் !
y not Sir? ! சொல்றேன் ! இது 8 மாசத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்ச ப்ராஜெக்ட் ! இதுக்காக ஆந்திராவில் ஆன்ட்டி நக்ஸலைட் ஸ்க்வாட்ல இருந்து என்னை ஸ்பெஷலா டெபுட் பண்ணி டிஜிபி ஒப்படைச்சார் !
இந்த திருச்சி, தஞ்சை மாவட்டத்தோட ஜீவன் காவிரி ! காவிரியோட பெரிய கிளை நதி ஆரவல்லி நதி ! ஆரவல்லி நதி கிட்டத்தட்ட 3 மாவட்டங்களோட கிராமங்கள் வழியா பாய்ஞ்சு நாகப்பட்டினம் தாண்டி பூம்புகார் கிட்ட காவிரியோட இணைஞ்சு, கடலில் கலக்குது ! 20 வருடங்களுக்கு முன் பச்சைப் பசேல்னு விவசாயம் வருஷம் முழுதும் செழித்து வளர்ந்திருந்த பூமி ! இப்போ ஒரு போகம் விளையவே வழியில்லாம இருக்காங்க! என்றார்
என்னங்க ஆனந்த்! ஆரவல்லி பத்தின டாகுமென்ட்ரி சொல்றிங்க ! ?
இது டாகுமென்ட்ரி இல்ல சார் ! #ஒரு_நதியின்_மரணம் !
என்றார் ஆனந்த் !
என்ன சொல்றிங்க ஆனந்த் ? இது பத்தி இந்த திருச்சி வட்டாரத்துல தினமுமே எதாவது கம்ப்ளெயின்ட் இருக்கும் ! இதுக்கு எதுக்கு ஸ்பெஷல் ஸ்க்வாட் !? புரியலையே ! என்ற கமிஷனரைச் சற்று விரக்தியாய் பார்த்தார் ஆனந்த் !
இது சின்ன விஷயம் இல்லை சார் !
மணல் மாஃபியானால இந்த 2 வருஷத்துல 28 கொலைகள் நடந்து இருக்கு ! 2 அரசு அதிகாரிங்க, , இன்ஃபாக்ட் ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் கூட 25 பொதுமக்கள் இறந்திருக்காங்க !
ஆனா இது எதுவுமே எங்கயுமே கேஸா பதிவாகலை !
இறந்த இன்ஸ்பெக்டர் இன்பசாகரன், சாலை விபத்துல இறந்ததா கேஸ் முடிஞ்சிடுச்சு ! ஆனா அவர் சாகறதுக்கு 2 நாள் முன்னாடி ஒரு மெயில் அனுப்பிச்சார் டிஜிபிக்கு ! அதுல ஆரவல்லி நதி மணல் மோசடி பத்தி மேலோட்டமா எழுதிருந்தார் ! டிஜிபியை சந்திக்க நேரம் கேட்டுருந்தார்! ஆனா அது பத்தி டிஜிபி விசாரிக்கறதுக்குள்ள அவர் இறந்துட்டார் !
இங்கே இருக்க யாரையும் நம்பாம,
ஐ ஆம் ஸாரி உங்களைக் கூட நம்பாம, என்னை இந்த ப்ராஜெக்டுக்கு அனுப்பினார் ! ஆனால் நான் வந்து 2 மாசம் கழிச்சி உங்களைப் பத்தின ரிப்போர்ட் கொடுத்ததும் தான் இந்த விஷயத்தை உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டார் ! என்று நிறுத்தினார் ஆனந்த் !
வெங்கட் க்ரேட் ! இவ்ளோ விஷயம் நடந்திருக்கா !? அந்த இன்ஸ்பெக்டர் இன்பசாகரன் இறந்தப்ப துளி கூட சந்தேகப் படலை ! Even போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கூட விபத்துன்னு தான் சொல்லிச்சு ! என்றார் !
எஸ் சார் !
அது விபத்து தான் !
உருவாக்கப் பட்ட விபத்து !
இதுல இறந்த 2 அரசு அதிகாரிகள், கதையும் இதே மாதிரித்தான் !
இது விஷயமா நான் விசாரிக்கறப்பதான், சின்னைய்யா, செல்வராசு ரெண்டு பேரும் கூட்டா ஆரவல்லி கரை மணல் காண்ட்ராக்டை எடுத்து குவாரி வச்சு பண்ணிட்டு இருக்கறதைக் கண்டு பிடிச்சேன்! அரசு நிர்ணயிச்ச அளவை விட 30 மடங்கு மணல் கொள்ளை போகுது ! இதைக் கண்டு பிடிச்சுத் தட்டிக் கேட்ட வரதராஜ புரத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களைக் கொன்னுருக்காங்க ! ஆனா அதுக்கான ஆதாரங்கள் இல்லை ! அந்த மணல் குவாரில ஒருத்தனைக் கண்டு பிடிச்சேன் ! அவன் மூலமா சில இன்ஃபர்மேஷன் கிடைச்சது, அதை வச்சுத்தான் அமரேந்திரன் என் வளையத்துக்கு வந்தார் ! ஆனா அதுக்குள்ள அடுத்தடுத்து 2 மர்டர் ! என்று முடித்தார் ஆனந்த் !
அப்போது கமிஷனரின் செல்ஃபோன் வைப்ரேட் மோடில், கண்ணாடி மேஜையின் மேல் சப்தம் எழுப்பியது !
ஒரு நிமிடம் என்ற வெங்கட், செல்ஃபோனை இயக்கி காதருகே கொண்டு சென்றார் !
யாரது என்றார் !
ஹலோ கமிஷனர் சார் ! ஐ ஆம் Dr. Sathiya Vani ! ஜி.எச். டீன் என்றார் ! கமிஷனர் எஸ் மேம் சொல்லுங்க என்றார் !
சத்தியவாணி சார் இப்போ நீங்க ஹாஸ்பிடல் வர முடியுமா? என்றார் ! ஏன் மேம் என்னாச்சு !
நீங்க அனுப்பி வச்சிருந்த 2 டெட் பாடிஸ் போஸ்ட் மார்ட்டம் நடந்திட்டு இருக்கு! அதில..... I feel something is suspicious ! அந்த உடம்புல எல்லாம் .........! ஐ ஆம் ஸாரி சார் !
you can't understand my explanation in air !
Can you comedown quickly ? என்று டிஸ்கனெக்ட் ஆனார் !
ஆனந்த் அவர் முகத்தைப் பார்க்க, கமிஷனர் நாம இம்மீடியட்டா ஜி.எச் போகணும் ஆனந்த் ! டீன் தான் பேசினாங்க! அந்த 2 பேர் உடம்புலன்னு ஆரம்பிச்சு நம்மளை வரச் சொல்லிருக்காங்க !
Come On ! Lets Go ! என்று தொப்பியை அணிந்து கொண்டே எழுந்தார் !
கமிஷனர் ஜீப் அங்கிருந்து பதினைந்து நிமிடங்களில் அரசு மருத்துவமனையை அடைந்தது !
ஆனந்தும், வெங்கட்டும் டீன் அறையை அடைந்தனர் ! அங்கு வாசலில் சத்தியவாணி அவர்களை வரவேற்றார் !
சற்று இளம் வயதைக் கடந்திருந்தாலும் அதை மறைக்க முயற்சி எடுத்திருந்தார் ! பளிச்சென்று அணிந்த வெந்நிற கோட்டும், அடர்ந்த பச்சை நிறத்தில் வெந்நிறப்பூக்களோடு இருந்த சுடிதாரில் இருந்தார் , அழகான சிறிய ரிம்லெஸ் கண்ணாடி இன்னும் கண்ணியத்தைக் கூட்டிற்று ! நட்போடு சிரித்து
வாங்க சார் ! கம் வித் மீ என்று அழைத்துச் சென்றார் !
கிர்ர்ர் என்று ஏசி துடித்துக் கொண்டிருந்த அந்த அறை முன் சென்று கதவைத் தட்டினார் ! ஒரு இளைஞன் முகத்தில் மாஸ்கோடு வெண்ணிற கோட்டோடு வெளிப்பட்டான்! நல்ல சிவப்பு நிறத்தில் 51/2 அடி உயரத்தில் ஹிந்தி நடிகன் போல் இருந்தான் ! மாஸ்கை இறக்கி ஹலோ சார் ஐ ஏம் Doctor Parthi Ravichandra ! நான் தான் மேடத்து கிட்ட சொன்னேன் ! நவ் ஐ ஹேவ் கன்ஃபர்ம்டு டூ ..! என்றான் !
புரியாமல் பார்த்த இருவரையும் கண்டு மெல்ல புன்னகைத்த சத்யா, திரும்பி பார்த்தி இன்னும் அவங்க கிட்ட விஷயத்தைச் சொல்லவே இல்லை ! வெய்ட் ! உள்ளே வாங்க சார் ! என்றார் !
பார்த்தி தான் அந்த 2 டெட் பாடியையும் போஸ்ட் மார்ட்டம் பண்ணினார் ! அவங்க உடலுக்கு உள்ள ரத்தம் உறைஞ்சு நீலக் கலர்ல மாறி இருக்கு ! அவங்களோட இதயம் ஒரு நீலக் கல்லு மாதிரி இறுகியிருக்கு ! அவங்க உடல்ல ஒரு விதமான கனிமம் செலுத்தப் பட்டு இருக்கு ! அது தான் காரணம் என்றார் ! தன் மொபைலில் அந்த ஃபோட்டோக்களைக் காண்பித்ததும் ஆனந்தும், வெங்கட்டும் அதிர்ந்தார்கள் !
இதயம் ஒரு சிறிய பாறாங்கல் போல் நீலக் கலரில் இருந்த்து !
இது என்னதோ கனிமம்னு சொன்னீங்களே டாக்டர் என்னன்னு கண்டு பிடிச்சிட்டீங்களா என்றார் ஆனந்த் !
எஸ் ஸார் ! அது பேரு #ரூட்டைல் (#Rutil) என்றார் சத்தியவாணி!
தொடரும் - 7

Monday, May 29, 2017

நதியோரம்_சதிநேரம்_பகுதி_6



காளி என்று கத்திய SDமூர்த்தி கத்திய கத்தலுக்கு அலறி ஓடி வந்தான் Kalidass ! என்னண்ணே ! என்னாச்சு? காலையில இவ்ளோ டென்சனாயிருக்கீங்க ? என்று பதறிய வாறு உள்ளே நுழைந்தான் ! நுழைந்தவன் கீழே விழுந்து கிடந்த பானை, மணல் குவியல், விரல்களைக் கண்டு அதிர்ந்தான் ! யாருண்ணே ? யாருண்ணே அனுப்பினது ? அண்ணே ! அண்ணே ! என்று அழைத்தவாறே அதிர்ச்சியில் அமர்ந்திருந்த மூர்த்தியின் தோள்களைத் தொட்டான் !
அது வரை வெறித்து அமர்ந்திருந்த மூர்த்தி அதிர்ந்து எழுந்தார் ! அருகிலிருந்த தண்ணீர் ஜாடியை எடுத்து விடாமல் குடித்து முடித்தார் !
எலே காளி ! இவன் யாருன்னு தெரிஞ்சாகணும் ! தமிழ்நாட்டு தலைவர் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டறவன் நான் ! எனக்கே விரலை அனுப்பி பயமுறுத்தறானா ? கூப்பிடுடா போலிஸை ! இன்னிக்கு ஈவினிங்குள்ள அவன் எனக்கு வேணும் என்று படபடத்தார் !
காளி பொறுமையாக அண்ணே ! நம்ம போலிஸ் மந்திரி Ilanchezhian க்கும் உங்களுக்கும் டேர்ம்ஸ் சரியில்லை ! அந்தாளு எப்படா உங்களைக் காலி பண்ணலாம்னு பார்த்துட்டு இருக்காப்ல ! இந்த விஷயம் போலிஸுக்குப் போச்சு, அவன் காதுக்குப் போகும், அவனே உங்களைக் கோர்த்து விட்டுருவான் ! உட்காருங்கண்ணே ! சூதானமா யோசிப்போம் ! கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணே என்றவன் ! சட்டென்று உள்ளே சென்று இரு கைகளிலும் கையுறையோடு வந்தான். மிகக் கவனமாக அந்தப் பானை, மணல் குவியல் விரல்களை எடுத்து அந்தப் பேப்பரையும் எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் வைத்தான் !
அப்போது என்ன மூர்த்தி கத்திட்டே இருக்க என்று அந்த அறைக்குள்இரண்டு கைகளிலும் காஃபி கோப்பைகளோடு நுழைந்தாள் Sumi !
   ஐந்து அடி இருக்கும் ! விரிந்து ஒதுங்கியிருந்த கூந்தல், ப்யூட்டி பார்லர்களில் திருத்தப் பட்ட புருவம், சற்றே விரிந்த தாமரை போன்ற கண்கள், கூர்மையான நாசி, அழகான வரிசைப்பற்கள், அளவெடுத்து அமைந்த சிலை போல பளபளக்கும் அந்த நைட்டியில் வந்து நின்ற சுமியை
அந்த நிலையிலும் சில நிமிடங்கள் ரசித்துப் பார்த்த மூர்த்தியின் அருகில் காஃபி கோப்பையை வைத்து விட்டு அவர் தலையைக் கோதி
என்ன ஆச்சு மேன் ! பேயடிச்ச மாதிரி இருக்கே ! ஏன் கத்தினே என்று அருகில் அமர்ந்தாள் !
காளி சட்டென்று மூர்த்தியிடம் கண்ணைக் காண்பித்து #அண்ணி ஒன்னுமில்ல ! ஒரு டென்டர் விவகாரம் ! அண்ணனுக்குத் தெரியாம ஒரு விஷயம் நடந்து போச்சு ! அதான் அண்ணன் கத்திட்டு இருந்தார் என்றான் !
நோ மூர்த்தி ! ஸம்திங் ராங் வித் யூ ! கொஞ்ச நாளா சரியில்லை நீ ! எதோ ராங்கான ரூட்ல போயிட்டுருக்கியோன்னு டவுட்டா இருக்கு ! என்ன ப்ரச்னை எங்கிட்ட சொல்லு ! என்றாள் !
மூர்த்தி சட்டென்று முகத்தை மாற்றி ஹைய்யோ ஒன்னும் இல்ல செல்லம் ! கொஞ்சம் அரசியல் டென்சன் ! உனக்குத் தெரியாததா ?
சுப்ரீம் கோர்ட்டோட
ஒன் ஆஃப் தி லீடிங் லாயர் நீ ! உனக்குத் தெரியாததா ?
 ரிலாக்ஸ் பேபி ! நீ டெல்லி ப்ராக்டிஸ் ! நான் சென்னை அரசியல்வாதி !நாம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கறதே அபூர்வம்! ! ரிலாக்ஸ் பேபி ! இன்னும் ஒரு வாரத்துல சட்டமன்றக் கூட்டம் ஆரம்பிச்சிடும் ! அதுக்கப்புறம் என்னாலயும் ஃப்ரியா இருக்க முடியாது ! இரு நம்ம எங்கயாச்சும் வெளில போகலாம்! என்னை ஒரு ஹாஃப் அவர் ஃப்ரியா விடு ! லெட்ஸ் செலிப்ரேட் என்றார் மூர்த்தி ! முகத்தில் சற்று நம்பிக்கையில்லாத பார்வையோடு காப்பிக் கோப்பையைப் பருகிக் கொண்டே வெளியே சென்றாள் சுமி !
காளி சற்று ரிலாக்ஸாகி அண்ணே ! நல்ல வேளை உளறிக் கொட்டாம இருந்திங்க ! அண்ணி நீதி நேர்மை சமதர்மம்னு சுத்திட்டு இருப்பாங்க ! இன்னும் உங்களை பழைய நேர்மை விளம்பி எஸ்டிஎம்னு நினைச்சிட்டு இருக்காங்க ! என்றவனை முறைத்த மூர்த்தி அந்தப் பேச்சை விடுடா ! இப்போ இந்த விவகாரத்தை எப்படி ஹேண்டில் பண்ணப் போற என்றார் !
ஆமா நான் இதை ஹேண்டில் பண்ணனும், இந்தாளு அந்தம்மாவைக் கூட்டிட்டு சுத்தப் போயிடுவாரு ! என்ன பொழப்புடா என்று மனதில் நினைத்தவாறே வெளியில் அண்ணே ! போலிஸுக்குப் போறதை விட எனக்குத் தெரிஞ்ச ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் கம்பெனி இருக்கு ! சுட்டுப் போட்டாலும் ரகசியத்தை வெளியில் சொல்ல மாட்டாங்க ! ஆனா வெவகாரத்தை ஹேண்டில் பண்றதுல கில்லி ! நம்ம சுகாதாரத் துறை அமைச்சர் Shanmugam Subramani வீட்டுல 100 கிலோ தங்கம் காணமப் போனப்ப , அவங்க தான் கண்டு பிடிச்சு, ஆளைப் பிடிச்சாங்க ! விவகாரத்தைக் காதும் காதும் வைச்ச மாதிரிப் பார்த்துக்குவாங்க ! மீடியாக்கு ஒரு நியூஸும் லீக் ஆகாது ! என்றான் !
மெல்ல நம்பிக்கை படர சரி காளி பார்த்து ஹேண்டில் பண்ணு ! ஒரு பொது இடத்துல மீட் பண்ணு ! விஷயம் எந்த காரணத்தைக் கொண்டும் லீக் ஆகக் கூடாது ! 2 நாள்ல அந்த ஆள் எனக்கு வேணும் என்றார் கண்ணில் வெறி மின்ன !
சென்னை க்ரோம் பேட்டை பகுதி
இராதா நகர் ஏரியாவின் ஒரு ஓரமாக அமைந்திருந்தது அந்தப் பெரிய வீடு ! அந்தப் பெரிய கேட்டைத் திறந்து எட்டிப் பார்த்து சல்யூட் அடித்த அந்த செக்யூரிட்டியை லட்சியம் செய்யாமல் மெல்ல உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண் ! அந்த வீட்டின் காலிங் பெல் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய மணி தொங்க விடப் பட்டிருந்தது ! அதன் கயிறைப் பிடித்து இரண்டு முறை அடித்தாள் ! உடனே அதன் அருகில் இருந்த சிறிய கதவு திறந்தது ! அதனுள் கை வைத்து ஒரு சாவியை எடுத்தாள் ! பின் மெல்ல கதவு அருகில் இருக்கும் இன்னொரு சிறிய அறையைத் திறந்தாள் ! உள்ளே சிறிய பட்டன் இருந்தது ! பெரு மூச்சோடு அந்த பட்டனை அழுத்தினாள் !
வீட்டு வாசல் மேலே ஒரு விளக்கெரிந்தது ! அந்த விளக்கு முன் நின்று Anitha Jenifer here ! உடனே அந்தக் கதவு திறந்தது ! Pattuவெளியில் வந்து ஹாய் அனி ! வந்து நேரமாச்சா ! கமின் என்றான்!
டேய் பட்டு ! நம்ம பாஸ் அலும்பு தாங்க முடியலடா ! ஒரு கதவைத் திறக்கவே அலிபாபா குகை மாதிரி இவ்ளோ நேரம் ஆனா கஸ்டமர் எப்படிடா நம்மளைத் தேடி வருவாங்க ? டெய்லி இதுக்காகவே நான் அரைமணிநேரம் முன்னாடி வரவேண்டியிருக்கு ! என்றாள் !
டெய்லி வீட்டுக்குப் போயிட்டு வர உனக்கே அப்படி இருந்தா , கூடவே இருக்க எனக்கு எப்படி இருக்கும் ? கேட்டா#VM_டிடெக்டிவ்_ஏஜென்ஸின்னா சும்மாவான்னு கேக்கறாரு ! வக்கீலுக்குப் படிச்சிட்டு Pkp ஸார் நாவல் எல்லாம் படிச்சிட்டு என்னவோ பரத் ரேஞ்சுக்கு பில்டப்போட வந்தா, சுபா சாரோட செல்வா கிட்ட மாட்டிக்கிட்ட முருகேசனா ஆயிட்டு இருக்கேன் ! என்றான் !
அப்போது மெல்ல எதிரில் உள்ள ஸ்பீக்கரில் இருந்து "பட்டு என்ன அங்க சத்தம் என்று குரல் வந்தது ! பட்டு சும்மா பேசிட்டு இருந்தேன் சார் ! என்றான் ! ஒரு கேஸ் வந்திருக்கு ! இரண்டு பேரும் மேலே வாங்க என்றது குரல் !
பட்டுவும் அனிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே மேலே சென்றனர் !
அந்த அறை சற்று விசாலமாக இருந்தது! அந்த அறையில் உள்ளே நுழைந்த அனிதா வீல் என்று கத்தினாள் ! அறையின் நடுவில் தலை கீழாக வெறித்த பார்வையோடு தொங்கிக் கொண்டிருந்தார் VM_Detective_Agencyயின் நாயகன் Kandan Mks

தொடரும் - 6


Saturday, May 27, 2017

நதியோரம்_சதிநேரம்_5

வரதராஜபுரம்

நீங்க பதைபதைக்கற அளவு செத்தவங்க ஒன்னும் உத்தம சிகாமணிங்க இல்லையே என்ற சித்தானந்தின் வார்த்தைகளைக் கேட்டு இன்ஸ்பெக்டர் அமரேந்திரன்
திகைத்து
என்ன சொல்றிங்க ? என்றார் !
சித்தானந்த் சிரித்துக் கொண்டே ஈஆளுங்களை உங்களுக்குத் தெரியாது இல்லையா சார் ?  என்று  கேட்டதும், அமரேந்திரன் சற்று கறுத்து பின் எனக்கு எப்படி தெரியும் ! நான் உங்களைக் கேள்வி கேட்டால் நீங்க என்னைக் கேட்கறிங்களா ? வர வர மீடியாவோட திமிருக்கு அளவில்லாமப் போச்சு என்றார் !

அப்போது அய்யோ மவனே என்ற குரல்    கேட்டது !
அப்போது அய்யோ மவனே என்ற குரல்    கேட்டது !சித்துவும் அமரேந்திரனும் திரும்பிப் பார்த்த போது உசிலைமணி போன்ற உருவத்தில் ஒரு பெரியவர் செல்வராசுவுடைய உடலருகே போக முயற்சி செய்து கொண்டிருந்தார் ! அவரை கைத்தாங்கலாக Valli வள்ளிநாயகம் பிடித்துக் கொண்டிருந்தான்!
அமரேந்திரன் விரைந்து அருகில் சென்றார் ! அய்யா அவசரப் படாதிங்க ! நில்லுங்க என்றார் !
யோவ் அமரு ! இதுக்காய்யா இவ்ளோ கஷ்டப் பட்டோம் ! ? என் குருத்தைக் கொலை பண்ணிட்டுப் போனவன் யாருடே என்று கதறினார் ! திடுக்கிட்டுப் போன அமரேந்திரன் அவரை அணைத்து காதருகில் ஐயா ! அமைதியா இருங்க ! உங்களை எனக்குத் தெரியும்னு இங்க யாருக்கும் தெரியாது என்றார் !
உடனே அருகில் இருந்த வள்ளிநாயகம் இப்போ எனக்குத் தெரிஞ்சு போச்சே என்றான் !
 டேய் ! பேசாம இரு சொக்கத் தங்கம் என்று அரற்றிய பெரியவர் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு யாரு சார் இவனைக் கொன்னது ? என்று கேட்டார் ! இல்லைங்கய்யா ! ஒரு தடயமும் கிடைக்கலை ! நான் உங்களை நேரில் பார்க்கிறேன் !
நீங்க இப்ப கிளம்புங்க, போஸ்ட் மார்ட்டம் முடிச்சப்புறம் உங்களை நான் நேரில் சந்திக்கிறேன் என்றார் !
வள்ளிநாயகத்தை அணைத்தவாறே அந்தப்பெரியவர் சென்றார்!

 அப்போது பின்னாலிருந்து வந்த  சித்து என்ன சார் ! இது யாருன்னு பொணத்தைப் பார்த்துக் கேட்டிங்க, ஆனா அவங்க அப்பா கூட சகஜமாப் பேசறிங்க என்றதும் ! திடீரென்று ஒருமைக்குத் தாவிய அமரேந்திரன் யோவ் நீ என்ன பெரிய அர்னாப்பா ரொம்பக் கேள்வி கேட்கற ? பத்திரிகைன்னு மரியாதை கொடுக்கறேன் கெடுத்துக்காதே ! என்று கூவினார்!

  மெல்ல அமைதியாக சிரித்த சித்து  சார் ! இந்த ஊருல என்ன நடக்குதுன்னு நான் 2 மாசமாய்க் கவனிச்சிட்டு இருக்கேன்!  அந்தப் பெரியவர் அருணாச்சலம் , அவர் பையன் செல்வராசு, மிராசு சின்னய்யா,  நீங்க எல்லாம் சேர்ந்து .......................
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சைரன் ஒலி ஒலித்தது !
   கமிஷனர் வந்துட்டாரு !   இருய்யா உன்னை வந்து கவனிச்சிக்கறேன் என்று அமரேந்திரன்  வேகவேகமாக அங்கு வ்ந்து நின்ற ஜீப் அருகே சென்றார் !
மெல்ல முன் கதவைத் திறந்து விரைப்பாக சல்யூட் அடித்துத் தளர்ந்தார் ! இறங்கியவரைப் பார்த்து குழம்பி இது கமிஷனர் இல்லையே ? என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே டிரைவர் இருக்கையில் இருந்து குதித்து இறங்கினார் கமிஷனர் வெங்கடேஷ் ஆறுமுகம் !
     ஆஜானுபாகுவான உயரம் ! நீண்டு வளர்ந்த கைகள், மூக்குக்கும், உதடுக்கும் நடுப்பட்ட பகுதி முழுவதையும் முறுக்கி வளர்த்த மீசையால் நிரப்பியிருந்தார் !
    என்ன மிஸ்டர் அமரேந்திரன் !
என்ன ஆச்சு எதும் தடயம் கிடைச்சதா?
அந்த நியூஸ் எப்படிக் கசிஞ்சது ? விசாரிச்சிங்களா ?
Bodys இருக்கா இல்லை போஸ்ட் மார்ட்டம் போயாச்சா
என்று அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டுக் கொண்டே விரைவாக நடந்த கமிஷனரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அமரேந்திரன் ஓடினார் !
  சார் ! வந்து இப்போ தான் வேன் வந்து இரண்டு பாடியையும் எடுத்துட்டுப் போயிருக்கு சார் !
ஃபாரன்ஸிக் டீம் வொர்க் பண்ணிட்டு இருக்காங்க சார் !
போலிஸ் நாய்  இந்த இரண்டாவது பாடியை ஐடன்டிஃபை பண்ணிட்டு அப்படியே நின்னுடுச்சு சார்!
வேற எதும் தடயம் கிடைக்கலை சார் !
என்று கடகடவென்று ஒப்பித்தார் அமரேந்திரன் !

அப்புறம் யாருய்யா அந்த நியூஸைச் சொன்னது என்று கேட்டதும், சித்துவைக் கை காண்பித்து இவன்    தான் சார் ! அதான் விசாரிச்சிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க என்று கை காட்டினார் !

சித்துவிடம் வேகமாகச் சென்ற கமிஷனர்
.
.
.
.
.

 என்னய்யா நினைச்சிட்டு இருக்க ?
உன் இஷ்டத்துக்கு நியூஸ் போடுவியா ?
 போலிஸுக்கு வேற வேலை இல்லையா
பத்திரிகைன்னா பெரிய கொம்பா ?
.
.
.
.
.
.
.
இப்படின்னெல்லாம் உங்க
 கிட்ட அமரேந்திரன் கேட்டுருப்பாரே சித்து ! ? என்று  சிரித்தபடியே சித்துவிடம் கை கொடுத்தார் வெங்கடேஷ் !

.
.
.
.
.
வெடிச் சிரிப்போடு ஆமோதித்த சித்து
ஆமாம்   சார் !
இன்ஸ்பெக்டர் என்னைப் பிரிச்சு மேஞ்சிட்டாரு என்றார் !
.
.
.
.
.
விக்கித்து நின்ற அமரேந்திரனிடம்
என்னய்யா பார்க்கிற ? இவர் ஃப்ரீலான்ஸ் ரிப்போர்ட்டர் இல்லை !
.
.
.
ஆனந்த்குமார் ஐபிஎஸ்   ! என்றார் !

தொடரும் - 5

Wednesday, May 24, 2017

நதியோரம்_சதிநேரம்_4



#சென்னை

நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள 
பிஎஸ் கார்டன் பகுதி ! பல விஐபிக்கள் குடியிருக்கும் இடம் ! 

அதிகாலை 5:30 மணி

அமைச்சர் S D மூர்த்தி கண் விழித்தார் ! தன் இரு கைகளையும் பார்த்துக் கொண்டே மேலே மாட்டியுள்ள அம்மன் படத்தைப் பார்த்துக் கண்ணில் ஒத்திக் கொண்டு வணங்கினார்! அருகில் இன்னும் தூங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே குளியலறைக்குள் சென்றார் !
 வெளியே வரும் போது ஜாகிங் ட்ரெஸ்ஸில் இருந்தார்! 
மெல்ல படுக்கை அருகே வந்து சிறு கைத்தடி ஒன்றை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் கைபேசியை எடுத்துக் கொண்டு மெல்ல படிகளில் இறங்கினார் !

  பொதுப் பணித் துறை அமைச்சர் SDM பிறந்த நாள் வாழ்த்துகள்  என்று வெளியே இருந்த பேனர்களைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த காவலர்கள் அடித்த சல்யூட்டை அலட்சியப் படுத்தி விட்டு மெல்ல நடக்க ஆரம்பித்தார் !
   ஏறக் குறைய 51/2 அடிக்குச் சற்று அதிகமான உயரம் ! மெல்லிய ரிம்லெஸ் கண்ணாடி, ஹேர்டை ஆங்காங்கே நாசுக்காகப் பயன்படுத்தப் பட்டதால் காதோரம் மட்டும் லேசாக நரை தெரிந்தது! கழுத்தில் ஒரு பெரிய செயின் வெளியே தெரிந்து மறைந்தது! அவர் இரு விரல்களில் அணிந்த பெரிய மோதிரங்களில்   ஒன்றில் கட்சியின் சின்னமும், இன்னொன்றில் அவரது தலைவரின் படமும் பெரிதாக டாலடித்தன !  சற்றே பெருத்த வயிறை இருக்கிக் கட்டியிருந்த ட்ராக் சூட் திமிறிக் கொண்டிருந்தது !
தமிழக அரசியலின் மிக முக்கிய பிரமுகரான எஸ்டிஎம் அதற்கு முந்தைய நாள் தான் தனது 43வது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி   அனைத்துப் பத்திரிகைகள் ஊடகங்கள் பரபரப்பான பிரேக்கிங் நியூஸோடு நலத்திட்ட   உதவிகள், அனாதை இல்லத் தத்தெடுப்பு, மத்திய அமைச்சர் வருகை, தலைவர் இல்லம் வந்து வாழ்த்து என்று  தனது  பலத்தைத் தெளிவாகத்   தலைமைக்குத் தெரியப் படுத்தியிருந்தார் !

(அடடா ! அவர் ஜாகிங்கை முடித்து விட்டார் ! அவரைக் கவனித்தது போதும் கதைக்குப் போவோம் !)
     முந்தைய நாள் கொண்டாட்டங்களைப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக வெளியிட்டதைப் பார்த்தவாறே வேலைக் காரன் கொடுத்த காஃபியைப் பருகினார் ! அவரது கை பேசி குறுஞ்செய்தி என்று குரல் கொடுத்தது !
  மெல்ல அதைத் தடவிப் பார்த்தார் ஒரு unknown no ல் இருந்து #How_IS_THE_GIFT? #BE_HAPPY_TO_DIE ! என்ற வார்த்தைகள் !
 மெல்லப் புன்னகைத்து விட்டுப் படியேறிச் சென்றார் ! எத்தனை மிரட்டல்களை இந்த இருபது ஆண்டுகளில் பார்த்திருக்கிறேன் !
அவரது அறையில் மெல்ல இசையை ஒலிக்க விட்டு Sumi என்று அழைத்தார் ! பதில் வரவில்லை!

Kalidass என்று அழைத்துக் கொண்டே அந்த  அறைக்குள் நுழைந்தார் ! அவருக்கு வந்த பரிசுப் பொருட்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன! நடுவே #BE_HAPPY என்ற வார்த்தைகளோடு இருந்த அந்த பார்சல் அவர் கண்ணில் பட்டது ! 
அந்த எஸ்.எம்.எஸ் அவர் கண்ணில் வந்து போக, அந்தப் பார்சலை எடுத்தார் ! 
BE HAPPYக்கு அருகே சிறியதாக TO DIE என்ற வார்த்தைகள் தெரிய மெல்ல வழிந்த வியர்வையோடு

மெல்லப்
.
.
பிரித்தார் !

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய பானை ஒன்று மூடியிருந்தது !

மூடியைப் பிரித்தார் ! கருப்பாக எதோ தெரிய கவிழ்த்தார்!
சர்ரென்று
மணல் குவியல்
கொட்டியது 
அதன் நடுவே
.
.
.
.
.
ஒரு  துண்டிக்கப் பட்ட 
ஆள் காட்டி விரலும், 
நடுவிரலும் !

 பதறி உதறியவர் 

#காளீ என்று கத்தினார் !

தொடரும் -4