Monday, May 29, 2017

நதியோரம்_சதிநேரம்_பகுதி_6



காளி என்று கத்திய SDமூர்த்தி கத்திய கத்தலுக்கு அலறி ஓடி வந்தான் Kalidass ! என்னண்ணே ! என்னாச்சு? காலையில இவ்ளோ டென்சனாயிருக்கீங்க ? என்று பதறிய வாறு உள்ளே நுழைந்தான் ! நுழைந்தவன் கீழே விழுந்து கிடந்த பானை, மணல் குவியல், விரல்களைக் கண்டு அதிர்ந்தான் ! யாருண்ணே ? யாருண்ணே அனுப்பினது ? அண்ணே ! அண்ணே ! என்று அழைத்தவாறே அதிர்ச்சியில் அமர்ந்திருந்த மூர்த்தியின் தோள்களைத் தொட்டான் !
அது வரை வெறித்து அமர்ந்திருந்த மூர்த்தி அதிர்ந்து எழுந்தார் ! அருகிலிருந்த தண்ணீர் ஜாடியை எடுத்து விடாமல் குடித்து முடித்தார் !
எலே காளி ! இவன் யாருன்னு தெரிஞ்சாகணும் ! தமிழ்நாட்டு தலைவர் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டறவன் நான் ! எனக்கே விரலை அனுப்பி பயமுறுத்தறானா ? கூப்பிடுடா போலிஸை ! இன்னிக்கு ஈவினிங்குள்ள அவன் எனக்கு வேணும் என்று படபடத்தார் !
காளி பொறுமையாக அண்ணே ! நம்ம போலிஸ் மந்திரி Ilanchezhian க்கும் உங்களுக்கும் டேர்ம்ஸ் சரியில்லை ! அந்தாளு எப்படா உங்களைக் காலி பண்ணலாம்னு பார்த்துட்டு இருக்காப்ல ! இந்த விஷயம் போலிஸுக்குப் போச்சு, அவன் காதுக்குப் போகும், அவனே உங்களைக் கோர்த்து விட்டுருவான் ! உட்காருங்கண்ணே ! சூதானமா யோசிப்போம் ! கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணே என்றவன் ! சட்டென்று உள்ளே சென்று இரு கைகளிலும் கையுறையோடு வந்தான். மிகக் கவனமாக அந்தப் பானை, மணல் குவியல் விரல்களை எடுத்து அந்தப் பேப்பரையும் எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் வைத்தான் !
அப்போது என்ன மூர்த்தி கத்திட்டே இருக்க என்று அந்த அறைக்குள்இரண்டு கைகளிலும் காஃபி கோப்பைகளோடு நுழைந்தாள் Sumi !
   ஐந்து அடி இருக்கும் ! விரிந்து ஒதுங்கியிருந்த கூந்தல், ப்யூட்டி பார்லர்களில் திருத்தப் பட்ட புருவம், சற்றே விரிந்த தாமரை போன்ற கண்கள், கூர்மையான நாசி, அழகான வரிசைப்பற்கள், அளவெடுத்து அமைந்த சிலை போல பளபளக்கும் அந்த நைட்டியில் வந்து நின்ற சுமியை
அந்த நிலையிலும் சில நிமிடங்கள் ரசித்துப் பார்த்த மூர்த்தியின் அருகில் காஃபி கோப்பையை வைத்து விட்டு அவர் தலையைக் கோதி
என்ன ஆச்சு மேன் ! பேயடிச்ச மாதிரி இருக்கே ! ஏன் கத்தினே என்று அருகில் அமர்ந்தாள் !
காளி சட்டென்று மூர்த்தியிடம் கண்ணைக் காண்பித்து #அண்ணி ஒன்னுமில்ல ! ஒரு டென்டர் விவகாரம் ! அண்ணனுக்குத் தெரியாம ஒரு விஷயம் நடந்து போச்சு ! அதான் அண்ணன் கத்திட்டு இருந்தார் என்றான் !
நோ மூர்த்தி ! ஸம்திங் ராங் வித் யூ ! கொஞ்ச நாளா சரியில்லை நீ ! எதோ ராங்கான ரூட்ல போயிட்டுருக்கியோன்னு டவுட்டா இருக்கு ! என்ன ப்ரச்னை எங்கிட்ட சொல்லு ! என்றாள் !
மூர்த்தி சட்டென்று முகத்தை மாற்றி ஹைய்யோ ஒன்னும் இல்ல செல்லம் ! கொஞ்சம் அரசியல் டென்சன் ! உனக்குத் தெரியாததா ?
சுப்ரீம் கோர்ட்டோட
ஒன் ஆஃப் தி லீடிங் லாயர் நீ ! உனக்குத் தெரியாததா ?
 ரிலாக்ஸ் பேபி ! நீ டெல்லி ப்ராக்டிஸ் ! நான் சென்னை அரசியல்வாதி !நாம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கறதே அபூர்வம்! ! ரிலாக்ஸ் பேபி ! இன்னும் ஒரு வாரத்துல சட்டமன்றக் கூட்டம் ஆரம்பிச்சிடும் ! அதுக்கப்புறம் என்னாலயும் ஃப்ரியா இருக்க முடியாது ! இரு நம்ம எங்கயாச்சும் வெளில போகலாம்! என்னை ஒரு ஹாஃப் அவர் ஃப்ரியா விடு ! லெட்ஸ் செலிப்ரேட் என்றார் மூர்த்தி ! முகத்தில் சற்று நம்பிக்கையில்லாத பார்வையோடு காப்பிக் கோப்பையைப் பருகிக் கொண்டே வெளியே சென்றாள் சுமி !
காளி சற்று ரிலாக்ஸாகி அண்ணே ! நல்ல வேளை உளறிக் கொட்டாம இருந்திங்க ! அண்ணி நீதி நேர்மை சமதர்மம்னு சுத்திட்டு இருப்பாங்க ! இன்னும் உங்களை பழைய நேர்மை விளம்பி எஸ்டிஎம்னு நினைச்சிட்டு இருக்காங்க ! என்றவனை முறைத்த மூர்த்தி அந்தப் பேச்சை விடுடா ! இப்போ இந்த விவகாரத்தை எப்படி ஹேண்டில் பண்ணப் போற என்றார் !
ஆமா நான் இதை ஹேண்டில் பண்ணனும், இந்தாளு அந்தம்மாவைக் கூட்டிட்டு சுத்தப் போயிடுவாரு ! என்ன பொழப்புடா என்று மனதில் நினைத்தவாறே வெளியில் அண்ணே ! போலிஸுக்குப் போறதை விட எனக்குத் தெரிஞ்ச ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் கம்பெனி இருக்கு ! சுட்டுப் போட்டாலும் ரகசியத்தை வெளியில் சொல்ல மாட்டாங்க ! ஆனா வெவகாரத்தை ஹேண்டில் பண்றதுல கில்லி ! நம்ம சுகாதாரத் துறை அமைச்சர் Shanmugam Subramani வீட்டுல 100 கிலோ தங்கம் காணமப் போனப்ப , அவங்க தான் கண்டு பிடிச்சு, ஆளைப் பிடிச்சாங்க ! விவகாரத்தைக் காதும் காதும் வைச்ச மாதிரிப் பார்த்துக்குவாங்க ! மீடியாக்கு ஒரு நியூஸும் லீக் ஆகாது ! என்றான் !
மெல்ல நம்பிக்கை படர சரி காளி பார்த்து ஹேண்டில் பண்ணு ! ஒரு பொது இடத்துல மீட் பண்ணு ! விஷயம் எந்த காரணத்தைக் கொண்டும் லீக் ஆகக் கூடாது ! 2 நாள்ல அந்த ஆள் எனக்கு வேணும் என்றார் கண்ணில் வெறி மின்ன !
சென்னை க்ரோம் பேட்டை பகுதி
இராதா நகர் ஏரியாவின் ஒரு ஓரமாக அமைந்திருந்தது அந்தப் பெரிய வீடு ! அந்தப் பெரிய கேட்டைத் திறந்து எட்டிப் பார்த்து சல்யூட் அடித்த அந்த செக்யூரிட்டியை லட்சியம் செய்யாமல் மெல்ல உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண் ! அந்த வீட்டின் காலிங் பெல் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய மணி தொங்க விடப் பட்டிருந்தது ! அதன் கயிறைப் பிடித்து இரண்டு முறை அடித்தாள் ! உடனே அதன் அருகில் இருந்த சிறிய கதவு திறந்தது ! அதனுள் கை வைத்து ஒரு சாவியை எடுத்தாள் ! பின் மெல்ல கதவு அருகில் இருக்கும் இன்னொரு சிறிய அறையைத் திறந்தாள் ! உள்ளே சிறிய பட்டன் இருந்தது ! பெரு மூச்சோடு அந்த பட்டனை அழுத்தினாள் !
வீட்டு வாசல் மேலே ஒரு விளக்கெரிந்தது ! அந்த விளக்கு முன் நின்று Anitha Jenifer here ! உடனே அந்தக் கதவு திறந்தது ! Pattuவெளியில் வந்து ஹாய் அனி ! வந்து நேரமாச்சா ! கமின் என்றான்!
டேய் பட்டு ! நம்ம பாஸ் அலும்பு தாங்க முடியலடா ! ஒரு கதவைத் திறக்கவே அலிபாபா குகை மாதிரி இவ்ளோ நேரம் ஆனா கஸ்டமர் எப்படிடா நம்மளைத் தேடி வருவாங்க ? டெய்லி இதுக்காகவே நான் அரைமணிநேரம் முன்னாடி வரவேண்டியிருக்கு ! என்றாள் !
டெய்லி வீட்டுக்குப் போயிட்டு வர உனக்கே அப்படி இருந்தா , கூடவே இருக்க எனக்கு எப்படி இருக்கும் ? கேட்டா#VM_டிடெக்டிவ்_ஏஜென்ஸின்னா சும்மாவான்னு கேக்கறாரு ! வக்கீலுக்குப் படிச்சிட்டு Pkp ஸார் நாவல் எல்லாம் படிச்சிட்டு என்னவோ பரத் ரேஞ்சுக்கு பில்டப்போட வந்தா, சுபா சாரோட செல்வா கிட்ட மாட்டிக்கிட்ட முருகேசனா ஆயிட்டு இருக்கேன் ! என்றான் !
அப்போது மெல்ல எதிரில் உள்ள ஸ்பீக்கரில் இருந்து "பட்டு என்ன அங்க சத்தம் என்று குரல் வந்தது ! பட்டு சும்மா பேசிட்டு இருந்தேன் சார் ! என்றான் ! ஒரு கேஸ் வந்திருக்கு ! இரண்டு பேரும் மேலே வாங்க என்றது குரல் !
பட்டுவும் அனிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே மேலே சென்றனர் !
அந்த அறை சற்று விசாலமாக இருந்தது! அந்த அறையில் உள்ளே நுழைந்த அனிதா வீல் என்று கத்தினாள் ! அறையின் நடுவில் தலை கீழாக வெறித்த பார்வையோடு தொங்கிக் கொண்டிருந்தார் VM_Detective_Agencyயின் நாயகன் Kandan Mks

தொடரும் - 6


Saturday, May 27, 2017

நதியோரம்_சதிநேரம்_5

வரதராஜபுரம்

நீங்க பதைபதைக்கற அளவு செத்தவங்க ஒன்னும் உத்தம சிகாமணிங்க இல்லையே என்ற சித்தானந்தின் வார்த்தைகளைக் கேட்டு இன்ஸ்பெக்டர் அமரேந்திரன்
திகைத்து
என்ன சொல்றிங்க ? என்றார் !
சித்தானந்த் சிரித்துக் கொண்டே ஈஆளுங்களை உங்களுக்குத் தெரியாது இல்லையா சார் ?  என்று  கேட்டதும், அமரேந்திரன் சற்று கறுத்து பின் எனக்கு எப்படி தெரியும் ! நான் உங்களைக் கேள்வி கேட்டால் நீங்க என்னைக் கேட்கறிங்களா ? வர வர மீடியாவோட திமிருக்கு அளவில்லாமப் போச்சு என்றார் !

அப்போது அய்யோ மவனே என்ற குரல்    கேட்டது !
அப்போது அய்யோ மவனே என்ற குரல்    கேட்டது !சித்துவும் அமரேந்திரனும் திரும்பிப் பார்த்த போது உசிலைமணி போன்ற உருவத்தில் ஒரு பெரியவர் செல்வராசுவுடைய உடலருகே போக முயற்சி செய்து கொண்டிருந்தார் ! அவரை கைத்தாங்கலாக Valli வள்ளிநாயகம் பிடித்துக் கொண்டிருந்தான்!
அமரேந்திரன் விரைந்து அருகில் சென்றார் ! அய்யா அவசரப் படாதிங்க ! நில்லுங்க என்றார் !
யோவ் அமரு ! இதுக்காய்யா இவ்ளோ கஷ்டப் பட்டோம் ! ? என் குருத்தைக் கொலை பண்ணிட்டுப் போனவன் யாருடே என்று கதறினார் ! திடுக்கிட்டுப் போன அமரேந்திரன் அவரை அணைத்து காதருகில் ஐயா ! அமைதியா இருங்க ! உங்களை எனக்குத் தெரியும்னு இங்க யாருக்கும் தெரியாது என்றார் !
உடனே அருகில் இருந்த வள்ளிநாயகம் இப்போ எனக்குத் தெரிஞ்சு போச்சே என்றான் !
 டேய் ! பேசாம இரு சொக்கத் தங்கம் என்று அரற்றிய பெரியவர் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு யாரு சார் இவனைக் கொன்னது ? என்று கேட்டார் ! இல்லைங்கய்யா ! ஒரு தடயமும் கிடைக்கலை ! நான் உங்களை நேரில் பார்க்கிறேன் !
நீங்க இப்ப கிளம்புங்க, போஸ்ட் மார்ட்டம் முடிச்சப்புறம் உங்களை நான் நேரில் சந்திக்கிறேன் என்றார் !
வள்ளிநாயகத்தை அணைத்தவாறே அந்தப்பெரியவர் சென்றார்!

 அப்போது பின்னாலிருந்து வந்த  சித்து என்ன சார் ! இது யாருன்னு பொணத்தைப் பார்த்துக் கேட்டிங்க, ஆனா அவங்க அப்பா கூட சகஜமாப் பேசறிங்க என்றதும் ! திடீரென்று ஒருமைக்குத் தாவிய அமரேந்திரன் யோவ் நீ என்ன பெரிய அர்னாப்பா ரொம்பக் கேள்வி கேட்கற ? பத்திரிகைன்னு மரியாதை கொடுக்கறேன் கெடுத்துக்காதே ! என்று கூவினார்!

  மெல்ல அமைதியாக சிரித்த சித்து  சார் ! இந்த ஊருல என்ன நடக்குதுன்னு நான் 2 மாசமாய்க் கவனிச்சிட்டு இருக்கேன்!  அந்தப் பெரியவர் அருணாச்சலம் , அவர் பையன் செல்வராசு, மிராசு சின்னய்யா,  நீங்க எல்லாம் சேர்ந்து .......................
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சைரன் ஒலி ஒலித்தது !
   கமிஷனர் வந்துட்டாரு !   இருய்யா உன்னை வந்து கவனிச்சிக்கறேன் என்று அமரேந்திரன்  வேகவேகமாக அங்கு வ்ந்து நின்ற ஜீப் அருகே சென்றார் !
மெல்ல முன் கதவைத் திறந்து விரைப்பாக சல்யூட் அடித்துத் தளர்ந்தார் ! இறங்கியவரைப் பார்த்து குழம்பி இது கமிஷனர் இல்லையே ? என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே டிரைவர் இருக்கையில் இருந்து குதித்து இறங்கினார் கமிஷனர் வெங்கடேஷ் ஆறுமுகம் !
     ஆஜானுபாகுவான உயரம் ! நீண்டு வளர்ந்த கைகள், மூக்குக்கும், உதடுக்கும் நடுப்பட்ட பகுதி முழுவதையும் முறுக்கி வளர்த்த மீசையால் நிரப்பியிருந்தார் !
    என்ன மிஸ்டர் அமரேந்திரன் !
என்ன ஆச்சு எதும் தடயம் கிடைச்சதா?
அந்த நியூஸ் எப்படிக் கசிஞ்சது ? விசாரிச்சிங்களா ?
Bodys இருக்கா இல்லை போஸ்ட் மார்ட்டம் போயாச்சா
என்று அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டுக் கொண்டே விரைவாக நடந்த கமிஷனரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அமரேந்திரன் ஓடினார் !
  சார் ! வந்து இப்போ தான் வேன் வந்து இரண்டு பாடியையும் எடுத்துட்டுப் போயிருக்கு சார் !
ஃபாரன்ஸிக் டீம் வொர்க் பண்ணிட்டு இருக்காங்க சார் !
போலிஸ் நாய்  இந்த இரண்டாவது பாடியை ஐடன்டிஃபை பண்ணிட்டு அப்படியே நின்னுடுச்சு சார்!
வேற எதும் தடயம் கிடைக்கலை சார் !
என்று கடகடவென்று ஒப்பித்தார் அமரேந்திரன் !

அப்புறம் யாருய்யா அந்த நியூஸைச் சொன்னது என்று கேட்டதும், சித்துவைக் கை காண்பித்து இவன்    தான் சார் ! அதான் விசாரிச்சிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க என்று கை காட்டினார் !

சித்துவிடம் வேகமாகச் சென்ற கமிஷனர்
.
.
.
.
.

 என்னய்யா நினைச்சிட்டு இருக்க ?
உன் இஷ்டத்துக்கு நியூஸ் போடுவியா ?
 போலிஸுக்கு வேற வேலை இல்லையா
பத்திரிகைன்னா பெரிய கொம்பா ?
.
.
.
.
.
.
.
இப்படின்னெல்லாம் உங்க
 கிட்ட அமரேந்திரன் கேட்டுருப்பாரே சித்து ! ? என்று  சிரித்தபடியே சித்துவிடம் கை கொடுத்தார் வெங்கடேஷ் !

.
.
.
.
.
வெடிச் சிரிப்போடு ஆமோதித்த சித்து
ஆமாம்   சார் !
இன்ஸ்பெக்டர் என்னைப் பிரிச்சு மேஞ்சிட்டாரு என்றார் !
.
.
.
.
.
விக்கித்து நின்ற அமரேந்திரனிடம்
என்னய்யா பார்க்கிற ? இவர் ஃப்ரீலான்ஸ் ரிப்போர்ட்டர் இல்லை !
.
.
.
ஆனந்த்குமார் ஐபிஎஸ்   ! என்றார் !

தொடரும் - 5

Wednesday, May 24, 2017

நதியோரம்_சதிநேரம்_4



#சென்னை

நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள 
பிஎஸ் கார்டன் பகுதி ! பல விஐபிக்கள் குடியிருக்கும் இடம் ! 

அதிகாலை 5:30 மணி

அமைச்சர் S D மூர்த்தி கண் விழித்தார் ! தன் இரு கைகளையும் பார்த்துக் கொண்டே மேலே மாட்டியுள்ள அம்மன் படத்தைப் பார்த்துக் கண்ணில் ஒத்திக் கொண்டு வணங்கினார்! அருகில் இன்னும் தூங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே குளியலறைக்குள் சென்றார் !
 வெளியே வரும் போது ஜாகிங் ட்ரெஸ்ஸில் இருந்தார்! 
மெல்ல படுக்கை அருகே வந்து சிறு கைத்தடி ஒன்றை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் கைபேசியை எடுத்துக் கொண்டு மெல்ல படிகளில் இறங்கினார் !

  பொதுப் பணித் துறை அமைச்சர் SDM பிறந்த நாள் வாழ்த்துகள்  என்று வெளியே இருந்த பேனர்களைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த காவலர்கள் அடித்த சல்யூட்டை அலட்சியப் படுத்தி விட்டு மெல்ல நடக்க ஆரம்பித்தார் !
   ஏறக் குறைய 51/2 அடிக்குச் சற்று அதிகமான உயரம் ! மெல்லிய ரிம்லெஸ் கண்ணாடி, ஹேர்டை ஆங்காங்கே நாசுக்காகப் பயன்படுத்தப் பட்டதால் காதோரம் மட்டும் லேசாக நரை தெரிந்தது! கழுத்தில் ஒரு பெரிய செயின் வெளியே தெரிந்து மறைந்தது! அவர் இரு விரல்களில் அணிந்த பெரிய மோதிரங்களில்   ஒன்றில் கட்சியின் சின்னமும், இன்னொன்றில் அவரது தலைவரின் படமும் பெரிதாக டாலடித்தன !  சற்றே பெருத்த வயிறை இருக்கிக் கட்டியிருந்த ட்ராக் சூட் திமிறிக் கொண்டிருந்தது !
தமிழக அரசியலின் மிக முக்கிய பிரமுகரான எஸ்டிஎம் அதற்கு முந்தைய நாள் தான் தனது 43வது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி   அனைத்துப் பத்திரிகைகள் ஊடகங்கள் பரபரப்பான பிரேக்கிங் நியூஸோடு நலத்திட்ட   உதவிகள், அனாதை இல்லத் தத்தெடுப்பு, மத்திய அமைச்சர் வருகை, தலைவர் இல்லம் வந்து வாழ்த்து என்று  தனது  பலத்தைத் தெளிவாகத்   தலைமைக்குத் தெரியப் படுத்தியிருந்தார் !

(அடடா ! அவர் ஜாகிங்கை முடித்து விட்டார் ! அவரைக் கவனித்தது போதும் கதைக்குப் போவோம் !)
     முந்தைய நாள் கொண்டாட்டங்களைப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக வெளியிட்டதைப் பார்த்தவாறே வேலைக் காரன் கொடுத்த காஃபியைப் பருகினார் ! அவரது கை பேசி குறுஞ்செய்தி என்று குரல் கொடுத்தது !
  மெல்ல அதைத் தடவிப் பார்த்தார் ஒரு unknown no ல் இருந்து #How_IS_THE_GIFT? #BE_HAPPY_TO_DIE ! என்ற வார்த்தைகள் !
 மெல்லப் புன்னகைத்து விட்டுப் படியேறிச் சென்றார் ! எத்தனை மிரட்டல்களை இந்த இருபது ஆண்டுகளில் பார்த்திருக்கிறேன் !
அவரது அறையில் மெல்ல இசையை ஒலிக்க விட்டு Sumi என்று அழைத்தார் ! பதில் வரவில்லை!

Kalidass என்று அழைத்துக் கொண்டே அந்த  அறைக்குள் நுழைந்தார் ! அவருக்கு வந்த பரிசுப் பொருட்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன! நடுவே #BE_HAPPY என்ற வார்த்தைகளோடு இருந்த அந்த பார்சல் அவர் கண்ணில் பட்டது ! 
அந்த எஸ்.எம்.எஸ் அவர் கண்ணில் வந்து போக, அந்தப் பார்சலை எடுத்தார் ! 
BE HAPPYக்கு அருகே சிறியதாக TO DIE என்ற வார்த்தைகள் தெரிய மெல்ல வழிந்த வியர்வையோடு

மெல்லப்
.
.
பிரித்தார் !

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய பானை ஒன்று மூடியிருந்தது !

மூடியைப் பிரித்தார் ! கருப்பாக எதோ தெரிய கவிழ்த்தார்!
சர்ரென்று
மணல் குவியல்
கொட்டியது 
அதன் நடுவே
.
.
.
.
.
ஒரு  துண்டிக்கப் பட்ட 
ஆள் காட்டி விரலும், 
நடுவிரலும் !

 பதறி உதறியவர் 

#காளீ என்று கத்தினார் !

தொடரும் -4

Saturday, May 20, 2017

நதியோரம்_சதிநேரம்-3


அமரேந்திரன் சற்று வியர்த்துப் போயிருந்தார் !
நாகராஜ் பின்னாலேயே தன் முன் தலையைத் துடைத்தவாறே விரைந்தார் !

கூட்டத்தை விலக்கியவாறு உள்ளே நுழைந்த அமரேந்திரன், சற்று இசகு பிசகாக, தலைகீழாக அந்த ஆலமர விழுதுகளோடு கட்டி வைக்கப் பட்டிருந்த அவனை (அதை)ப் பார்த்தார் !

கையில் க்ளவுஸ் போட்டு மெதுவா இறக்குங்க !  எந்த தடயமும் அழிஞ்சிடாமப் பார்த்துக்கோங்க என்று சொல்லியவாறே கையில் க்ளவுஸ் அணிந்து   கவிழ்ந்து போடப் பட்ட அந்த உருவத்தைப் புரட்டிப் போட்டார் !

  "நடு வயதுகளின் ஆரம்பத்தில் இருக்கலாம் ! மூடாத கண்களில் மரண பீதி  மிச்சம் இருந்தது !  கழுத்து, நெஞ்சு, வயிறு என்று சரமாரியாக வெட்டு வாங்கியிருந்தான் ! கைகளைக் கவனித்த_போது_அமரேந்திரனின்_விரல்கள்_சற்று_நடுங்கின! அவனது ஆட்காட்டி விரல்கள் இரண்டும் வெட்டப் பட்டிருந்தன ! வாய் உப்பியிருந்தது!

    அமரேந்திரன் சீப்பை எடுத்து தன் மீசையைச் சீவியபடியே மெல்ல இயல்பு நிலைக்கு வந்தார் ! அவரது பையில் கைபேசி மணி ஒலித்தது!
 மெல்ல தன் காதுகளுக்குக் கொண்டு சென்ற அவரது உடல் சற்று விரைத்தது !
 எஸ் சார் !
 சார்....! உங்களுக்கு எப்படி ?
அய்யோ இல்லை சார்! இன்னும் தகவல் சொல்லலையே சார் !? எப்படித் தெரிஞ்சது ?
இல்லை சார் ! உங்க கிட்ட கேட்கலை சார் ! விசாரிக்கிறேன் சார் !
ஆமா சார்!
 இரண்டு பேர் சார் !
ஒருத்தர் மிராசுதார்னு சொன்னாங்க சார்!
ஆமா சார் ! இன்னும் இரண்டாவது ஆள் அடையாளம் தெரியலை சார் !
சரி சார் ! வாங்க சார்!
ஆமா சார் !
போஸ்ட் மார்ட்டம் அனுப்பப் போறேன் சார்!
சரி சார் பார்க்கறேன் சார் !
தேங்க் யூ சார் !
என்று தளர்ந்தார் !

யோவ் சின்னய்யா ! மீடியாக்கு யார்யா தகவல் சொன்னது ?  அதுக்குள்ள  நியூஸ்20 சேனல்ல  செய்தி சொல்றாங்களாம் !

   எவன் மீடியால இருந்து இருக்கான் பாருய்யா? எல்லோரயும் அப்புறப் படுத்து! இங்க யாரும் கேமராவோட இருக்கானான்னு பாரு! இருக்கற தலைவலி போதாதுன்னு இப்போ கமிசன்ர் வேற டைரக்டா ஸ்பாட்டுக்கு வராராம்!
என்று பொரிந்தார்!
 
ஐயா! இது யாருன்னு எனக்குத் தெரியுங்க! என்ற குரலில் நிமிர்ந்தார் !

யாருப்பா இது ? அய்யா ! இது நம்ம பக்கத்து ஊர் ப்ரெசிடென்ட் மகன்யா....! என்றதும் சற்றே நிமிர்ந்தார்!

அந்த ஆள் பேரு தெரியுமா ? செல்வராசுங்கய்யா !
ரெண்டு நாள் முன்னாடி தாங்கய்யா குவாரில பார்த்தேன் !  என்றான்!

உன் பேரு என்னப்பா என்ன பண்ற என்ற அமரேந்திரனைப் பார்த்து நெளிந்த படியே ஐயா என் பேரு வள்ளிநாயகம் (Valli Dpi) ! இங்கே அழகுச்சிலை அம்சலட்சுமி ரசிகர் மன்றத் தலைவராயிருக்கேன் என்றான்! அவரது முறைப்பை அலட்சியப் படுத்தியவாறே!

அப்போது ஏட்டு  ஒருவரை அழைத்துக் கொண்டு வந்தார்! சார் இவர்  தான் சார் பத்திரிகை ஆளு ! போட்டோ எடுத்து வாட்ஸப்புல அனுப்பிட்டு இருந்தாரு ! கூட்டியாந்தேன் என்றார்!

ஏய் ! மிஸ்டர் !  இங்க பேஸிக் விசாரணை கூட நடக்கலை ! அதுக்குள்ள மீடியால செய்தி போடறிங்களே !?  என்னய்யா தெரியும் இதைப் பத்தி? ஏன் இப்படி ப்ரச்னை பண்றிங்க ?
உங்க பேர் என்ன ? எந்தப் பத்திரிகை என்று அடுத்தடுத்த கேள்விகளைப் புன்னகையோடு எதிர் கொண்டவர் சிரித்துக் கொண்டே கை கொடுதார் !

என் பெயர் ஆனந்த்குமார் ! சித்தானந்த் ! ஃப்ரிலான்ஸ் ரிப்போர்ட்டர் !

நீங்க பதைபதைக்கற அளவு செத்தவங்க ஒன்னும் உத்தம சிகாமணிங்க இல்லையே என்றார்!

தொடரும் !

Sunday, May 7, 2017

நதியோரம்! சதி நேரம் - 2

வரதராஜ புரமே ஆரவல்லி நதிக் கரையில் கூடி விட்டது !
ஆளாளுக்கு அதிர்ச்சியில் கூடி பேசிக் கொண்டிருந்தனர்!
அந்த சமயத்தில் சைரன் ஒலியோடு ஆம்புலன்ஸும், போலீஸ் ஜீப்பும் வந்து சேர்ந்தன !

இன்ஸ்பெக்டர் அமரேந்திரன் முன் சீட்டில் இருந்து கீழ் இறங்கினார் !

6 அடி உயரத்தில், தமிழக போலீஸின் முக்கிய அங்கமான தொப்பை சற்றும் குறைவில்லாமல் அதைக் கஷ்டப்பட்டு பெல்ட்டுக்குள் அடக்கியிருந்தார்  அல்லது அடக்க முயற்சி செய்திருந்தார் ! தொங்கி நிமிர்ந்த மீசையை தன் பையில் இருந்த சிறு சீப்பினால் சீவினார்!, தொப்பியைக் கழற்றி, பளிச் சென்றிருந்த தன் முன் வழுக்கையை கர்சீப்பால் துடைத்துக் கொண்டே அணிந்திருந்த கூலிங் கிளாஸைக் கழற்றி சட்டைப் பையில் வைத்தார் !  தூக்கமின்மையும் நேற்று அருந்திய திரவத்தின் எச்சமும் சிவப்பு வரிகளாய், கண்ணின் கீழே அணிவகுத்தன !

யாருய்யா இதைப் பார்த்தது ? வரச் சொல்லு என்று அங்கிருந்த ஒரு மர நிழலில் போய் நின்றார் !
பயந்து நடுங்கிக் கொண்டே அமுதா, கருப்பாயி, வேலாயி மூவரும் முன் வந்து நின்றனர் !
யாரும்மா முதல்ல பார்த்தது ? என்று கேட்டதும் வேலாயி மெல்லக் கையுயர்த்தி நான் தானுங்கய்யா என்றாள் ! நாய் குலைச்சி எதையோ இழுத்துச்சுங்கய்யா ! நான் அதை விரட்டப் பார்த்தப்ப புதர் நடுவுல வந்து ........ என்றாள் இன்னும் பதற்றம் குறையாத வேலாயி !

அவள் சொல்வதை அப்படியே குறித்துக் கொண்ட அமரேந்திரன்,  ஏட்டய்யாவிடம் மாரிமுத்து, ஃபாரன்ஸிக் டீம் வந்தாச்சா ?  பாடி கிட்ட எதும் தடயம் கிடைக்குதான்னு பார்த்திங்களா ? சின்னய்யா குடும்பத்துல இருந்து யாரும் வந்திருக்காங்களா என்று வரிசையாய்க் கேட்டுக் கொண்டே  கான்ஸ்டபிள்களைக் கூட்டத்தை விலக்குமாறு சொல்லிக் கொண்டே  "எலேய் ! யாரும் பொணத்தைத் தொடல்லியே! வெலகுங்க, வெலகுங்க, என்று விழி விரித்து இறந்து கிடந்த சின்னைய்யாவிற்கு அருகில் வந்தார் !

கண்கள் மேலே செருகி, கழுத்து, மார்பு , கை , கால் என்று பல இடங்களில் வெட்டு வாங்கி கொடூரமாகச் செத்திருந்தார் சின்னய்யா ! அவர் அணிந்திருந்த கண்ணாடி அருகில் நொறுங்கி விழுந்து கிடந்தது !
அப்போது தான் கவனித்தார் ! சின்னைய்யா வின் இரு கைகளிலும் நடு விரல் வெட்டப் பட்டிருப்பதை !

Dog Squad  வந்து சேர்ந்தது !  மெல்ல  சடலம் இருந்த இடத்தை முகர்ந்து விட்டு கரையின் உள்ளே ஓட ஆரம்பித்தது போலிஸ் நாய் ஸீசர் !  தொடர்ந்து அதன் ட்ரெய்னரும் கான்ஸ்டபிளும் ஓடுவதைப் பார்த்துக் கொண்டே அமரேந்திரன் சீப்பை எடுத்து தனது மீசையை சீவிக் கொண்டார் !

அப்போது சார்..!!!!!!

என்று கத்திக் கொண்டே மூச்சிரைக்க ஓடி வந்த கான்ஸ்டபிள்

சார் ..!

சார்....! அங்க
.
.
.
.
.
.அங்கே
என்று முடிக்க முடியாமல் மூச்சு வாங்கினார் !

என்ன நாகராஜ் என்னாச்சுய்யா என்று வினவ

சார் ! அங்கேயும் ஒரு பொணம் சார் ....!

என்று பதற,

அமரேந்திரனுக்கு சட்டென்று இதயம் நின்று துடித்தது !

இந்த கேஸ் நம்மைச் சக்கையாக அலைக்கழிக்கப் போகிறது ......!! என்று தன் தலையைக் கர்சீப்பால் துடைத்தார் !

.... தொடரும் !

நதியோரம் சதிநேரம் - 1

மெல்ல இருள் படலம் நீங்கி, சூரியன்  சோம்பல் முறித்து உதயமாக ஆயத்தமானான் ! பறவைகள் தங்கள் கடமைகளை எண்ணி வரிசையாய்ப் பறக்க ஆரம்பித்தன !
அந்த வரதராஜ புரத்தின் ஆரவல்லி நதியில் மிச்ச மீதி எச்சங்கள் நடுவே இருக்க, அள்ளியது போக மீதி இருந்த மணல் பிரதேசங்கள் எனது வாழ்வு இன்னும் எவ்வளவு நாளோ என்று ஒதுங்கிக் கிடந்தன !

கடமைக்காகக் கூவிய சேவல் ஒலி கேட்டு, கருப்பாயி விழித்துக் கொண்டாள் !

"அடக் கெரகமே ! பொழுது விடிஞ்சில்ல போச்சு ? தூங்கிட்டுல்ல கிடந்துருக்கோம்?
யோவ் எந்திரிய்யா ! பொசபொசன்னு விடிஞ்சி போச்சு, வயலோரம் போய் வாரேன்!  ஆச்சி வீட்ல பாலை வாங்கி காய்ச்சி வையி என்று சொல்லி கிளம்பினாள்!
அந்த ஊருக்கு கழிப்பறை, குளியலறை, துணி துவைக்கும் இடம், இதர பிற விஷயங்களுக்கும் அந்த ஆரவல்லி நதி தீரம் தான் ஒரே வழி !
அடுத்த வீட்டு அமுதாவையும், எதிர் வீட்டு வேலாயியையும் அழைத்துக் கொண்டு மூவரும் அந்த நதியோர புதர்களிடையே சென்று மறைந்தார்கள் !

சற்று நேரத்தில் ..... !

#வீல்.......! ஐயோ என்ற சத்தம் வேலாயிடம் இருந்து!

என்னடி ஆச்சு ! கூவுற என்று கேட்டபடி பதறி வந்த கருப்பாயியும், அமுதாவும் அதிர்ச்சியாகி  வேலாயியோடு  சேர்ந்து  கத்த ஆரம்பித்தார்கள் !
.
.
.
.
.
.
அங்கே .......!!

.
.
.
.
.
.
.
.
. ஊர் பெரிய மிராசு சின்னைய்யா உயிரற்ற விழிகளோடு  புதரின் மறைவில் வெட்டுக் காயங்களோடு விழுந்து கிடந்தார் !

...... தொடரும்

.

.