Monday, June 19, 2017

நதியோரம்_சதிநேரம்-10

#ரூடைல்(#Rutil) என்ற Sathiya Vaniயின் வார்த்தைகளைக் கேட்ட ஆனந்த்குமார்வெங்கடேஷ் முகத்தில் அதிர்வு ரேகைகள் காட்டினர்! ஆனந்த் , சத்யா, அன் Parthi இந்த விஷயத்தை வெளியில் தெரிய வேண்டாம் ! இது பற்றிய எல்லாமே ரகசிய விசாரணையில் இருக்கு என்றார் ! இருவரும் ஒன்றும் பேசாமல் தலையாட்டினர் !
ஆனந்த் , கமிஷனர் இரண்டு பேரும் வெளியே வந்தனர் ! ஆனந்த் கமிஷனரிடம் சார் ! விஷயம் சாதாரண மணல் திருட்டு மட்டும் இல்லை சார் ! அதுக்கு மேலேயே போயிட்டு இருக்கு ! ரூடைல் என்பது பத்தி ! தெரியும் இல்லையா சார்!? என்றார் !
வெங்கடேஷ் எஸ் ! கொஞ்சம், கொஞ்சம், !! இது ஒரு விதமான கனிமம் ! கடல் மணலில் கிடைக்கும் ஒரு தாது ! ஆம் ஐ கரெக்ட் ஆனந்த் ? என்றார்
எக்ஸாக்ட்லி சார் ! இது மட்டும் அல்ல, #கார்னெட்#இலுமனைட்#ஜிர்கான் அப்படின்னு நிறைய கனிமங்கள் கடல் மணலில் கலந்து இருக்கு ! உங்களுக்குத் தெரியாதது இல்ல !
கன்னியாகுமரி, தூத்துக் குடி கடலோரத்தில் அந்தக் கனிமவளங்களைச் சுரண்டிட்டு கைலாஷ்ராஜன்னு ஒரு பெரிய மாஃபியா அரசாங்கங்களைக் கைக்குள்ள வச்சுட்டு வியாபாரம் பண்ணிட்டு இருக்காரே ! ஆனால் இது ஆற்று மணல் !
இதுல எங்கே ரூடைல் வந்தது !? அதான் தெளிவு படுத்தனும் !
எனக்கு இன்னொரு முறை அந்த வரதராஜபுரம் வரை போகணும்னு தோணுது சார் ! அங்கே ஊருக்குள்ள கொஞ்சம் விசாரிக்கணும் ! தேர் வி கேன் கெட் ஸம் டீடெய்ல்ஸ் !
ஓகே ! ஆனந்த் ! கோ அஹெட் ! யூ கேன் கால் மீ ஃபார் எனி ரெஃப்ரென்ஸ் ஆர் ஹெல்ப் ! உங்களுக்கு ஹெல்ப் பண்ண ஒரு நியூ Enthusiastic எஸ்.ஐ ஒருத்தரை அனுப்பறேன் ! ஆல் தி பெஸ்ட் என்றார் வெங்கடேஷ் !
அருணாச்சலமுடைய பங்களா பரபரப்பாக இருந்தது ! Valli Dpiஅங்கிருக்கும் ஆட்களிடம் கத்திக் கொண்டிருந்தான் ! எப்படிய்யா அய்யா காணமப் போவாரு ? நான் அடுத்த ரூம்ல தான் படுத்து இருக்கேன் ! வெளியில் பூட்டி சாவி நீங்க தான் வச்சு இருக்கிங்க ! எப்படிய்யா காணமப் போவாரு ? என்றான் பதற்றமாக !
வெளியே இருந்த இரண்டு கான்ஸ்டபிள்களிடமும் என்ன சார் ஆச்சு !? இதுக்குத்தான் பாதுகாப்பா, என்றான் ! இரண்டு கான்ஸ்டபிள்களும், வள்ளி நாங்க வெளில தான் இருந்தோம் ! எப்படின்னு தெரியலை ! என்றார்கள் !
அந்நேரம் ஒருவன் பதறிக் கொண்டு ஓடி வந்தான் ! முகமெங்கும் பீதியில் வெளுத்து இருந்தது ! அய்யோ ! அய்யோ ! என்று கதறியபடி வந்து அய்யோ அங்கே குவாரில ........... ! குவாரில...... என்று முடிக்காமல் மூச்சிரைத்தான் ! வள்ளி அவனை ஆசுவாசப் படுத்தி என்ன ஆச்சு மாரி ? தண்ணி குடிடே என்று அமர்த்தினான் !
அங்கே அங்கே அய்யாவை.....!!! அய்யாவை என்று மயங்கிச் சரிந்தான்!
அப்போது அந்த போலீஸ் ஜீப் அந்த காம்பவுண்டுக்குள் நுழைந்தது!
தொடரும் 10

No comments: