http://www.facebook.com/suresh.dhakshinamoorthy?v=app_2347471856#!/notes/suresh-dhakshinamoorthy/akait-teru/374740108052
Thursday, April 1, 2010
அங்காடித் தெரு
தியேட்டரில் போய் படம் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு..!! நேற்று வேலை முடியும்போது எனது சக ஸ்டோர் மேனேஜர்கள் இருவர் வந்தனர்...!! சார் நாளைக்கு உங்களுக்கு விடுமுறைதானே..!! தாம்பரம் நேஷனல் தியேட்டரில் அங்காடித் தெரு படம் ஓடுது சார்..!!! போலாம் சார்..!! நம்ம........... னா ஸ்டோர் கதைன்னு சொன்னாங்க சார்.!! என்றார்கள்...!! அவர்களிருவருமே அந்த அண்ணாச்சி கடையில் 2 வருடத்துக்கு மேல் வேலை பார்த்தவர்கள்...!!
வண்டிகளை விரட்டி, நிறுத்தி உள்ளே செல்வதற்குள் படம் ஆரம்பித்து விட்டார்கள்..!!!
மெதுவாக கதைக்குள் செல்ல
ஆரம்பிக்க, என் இருபுறமும் இருந்தவர்கள் ஒவ்வொரு காட்சிக்கும் கை தட்டினார்கள்..!! சார்.!! இப்படித்தான் சார் சோறு போடுவானுங்க..!! இப்படித்தான் சார் படுத்துக் கிடப்போம்...!! இப்படித்தான் சார் கண்ணு மண்ணு தெரியாம அடிப்பானுங்க..!! என்று அவர்கள் அடித்த கமெண்ட்கள் , அவர்கள் முக உணர்ச்சிகள், நிஜத்தைப் பறை சாற்றின...!!!!
அதற்கேற்றார் போல் மிக அழகாய் கதைக்கான களத்தைத் தேர்ந்தெடுத்து இருந்தார் வசந்த பாலன்..!!
ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அருமை..!! வயோதிக முஸ்லிம் முதியவர், கண் தெரியாதவர், உயரக் குறைவானவரும் அவரது மனைவியும்..!! செந்தில் முருகன் ஸ்டோரில் வேலை பார்த்தே காலில் சரும நோய் வந்து இறப்பவர்..!! பளிச்சென்று வந்து பகீரென முடியும் அந்தத் துயரக் காதல் ஜோடி, என ஒவ்வொரு அணிகலனும் அருமையாய் அமைய அற்புத நகையாய் மின்னுகிறது அங்காடித் தெரு..!!!
முக்கியமாய் நாயகி கனி..!!
சின்னச் சின்ன பாவனைகளையும், கண்களால் பேசும் கவிதைகளையும், பளீரென மாறும் முக மாற்றங்களையும், இயல்பாக வெளிப்படுத்தும் அஞ்சலி...!! அற்புதமான தேர்வு...!! கற்றது தமிழுக்கு அடுத்து கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு..!!
பயன்படுத்திக் கொண்டார் என்றால் தமிழ் பேசும் திரையுலகுக்கு இன்னொரு திறமையான நடிகை கிடைப்பார்..!!
நாயகன் லிங்கு..!!
எளிமையான தோற்றம், சில இடங்களில் நடிக்கக் கஷ்டப் படுவதுபோல் முகம் காட்டினாலும், பாத்திரத்திற்கு இயல்பாகவே பொருந்திப் போகிறார்..!! நாயகியிடம் ஹாஸ்டலில் இரவு புகுந்து வெடிக்கும் போதும், கடைசிக் காட்சிகளிலும் பாஸ்மார்க் வாங்குகிறார்..!!
யாரும் முயற்சிக்காத கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த வசந்த பாலனுக்குப் பாராட்டுக்கள்..!! நாம் தினம் வரும் ஒரு கடையில் இத்தனை விஷயங்கள் நடக்கிறதா என்று சற்று அருகில் இருக்கும் சில தம்பதிகள் பேசிக் கொண்டிருந்தார்கள்..!
உணவுக்காக அடித்துக் கொள்ளும் மெஸ், உறங்கக் கூட இடமில்லா தங்குமிடம்,சூபர்வைசர், அண்ணாச்சி என வெளிப்படும் கொடூரங்கள்..!! மாதாமாதம் மறக்காது அண்ணாச்சியால் கவனிக்கப்படும் அரசுத் துறைகள், அண்ணாச்சிக்குக் காவடி தூக்கும் காவல் துறை, இரவு நேரச் சென்னை, என்று எல்லா விடயங்களிலும் புகுந்து வந்திருக்கிறார் இயக்குநர்..!!
நீண்ட நாட்களுக்குப் பின் நல்லதொரு படம் பார்த்த திருப்தி..!! படம் பார்த்து வெளிவந்ததும் எங்கள் மூவரிடையே ஒரு நீண்ட மௌனம்...!! படம் பாதித்து இருக்கிறது என்று புரிந்தது..!! ஒரு சக நிர்வாகி மெல்ல வாய் திறந்தார்" இப்படித்தான் சார் அந்த ஸ்டோரில் ஒரு பெண்ணை லவ் பண்ணினான்னு ஒருத்தனை அடிச்சே கொன்னுட்டாங்க....!!" "அந்தப் பெண்ணை.......................' அடுத்த நாள் எதுவும் நடக்காத மாதிரி வேலையெல்லாம் நடந்துச்சு சார்..!! அன்னிக்கு அந்த வேலை வேண்டாம்னு அந்தக் கடையை விட்டு வெளியில் வந்துட்டோம் சார்..!! இந்த படத்தைப் பார்த்ததும் பழைய நினைவுகள் எல்லாம் வந்துடுச்சு சார்....!! என்றனர்..!!
மொத்தத்தில் நாளை இது போன்ற ஒரு கடையில் வேலை பார்க்கும் சிப்பந்தியை ஏளனமாய் "ஏய்..!! அதை எடுத்துக் கொடு...!! இதை எடுத்துக் கொடு" என்று மிரட்டிக் கொண்டிருக்கும் பல வாடிக்கையாளர்களில் ஒருவரேனும், அவர்கள் மீது இரக்கப் பார்வை பார்த்தார்கள் என்றால் அதுவே இப்படத்துக்கு மிகப் பெரிய வெற்றி..!!
வண்டிகளை விரட்டி, நிறுத்தி உள்ளே செல்வதற்குள் படம் ஆரம்பித்து விட்டார்கள்..!!!
மெதுவாக கதைக்குள் செல்ல
ஆரம்பிக்க, என் இருபுறமும் இருந்தவர்கள் ஒவ்வொரு காட்சிக்கும் கை தட்டினார்கள்..!! சார்.!! இப்படித்தான் சார் சோறு போடுவானுங்க..!! இப்படித்தான் சார் படுத்துக் கிடப்போம்...!! இப்படித்தான் சார் கண்ணு மண்ணு தெரியாம அடிப்பானுங்க..!! என்று அவர்கள் அடித்த கமெண்ட்கள் , அவர்கள் முக உணர்ச்சிகள், நிஜத்தைப் பறை சாற்றின...!!!!அதற்கேற்றார் போல் மிக அழகாய் கதைக்கான களத்தைத் தேர்ந்தெடுத்து இருந்தார் வசந்த பாலன்..!!
ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அருமை..!! வயோதிக முஸ்லிம் முதியவர், கண் தெரியாதவர், உயரக் குறைவானவரும் அவரது மனைவியும்..!! செந்தில் முருகன் ஸ்டோரில் வேலை பார்த்தே காலில் சரும நோய் வந்து இறப்பவர்..!! பளிச்சென்று வந்து பகீரென முடியும் அந்தத் துயரக் காதல் ஜோடி, என ஒவ்வொரு அணிகலனும் அருமையாய் அமைய அற்புத நகையாய் மின்னுகிறது அங்காடித் தெரு..!!!
முக்கியமாய் நாயகி கனி..!!
சின்னச் சின்ன பாவனைகளையும், கண்களால் பேசும் கவிதைகளையும், பளீரென மாறும் முக மாற்றங்களையும், இயல்பாக வெளிப்படுத்தும் அஞ்சலி...!! அற்புதமான தேர்வு...!! கற்றது தமிழுக்கு அடுத்து கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு..!!
பயன்படுத்திக் கொண்டார் என்றால் தமிழ் பேசும் திரையுலகுக்கு இன்னொரு திறமையான நடிகை கிடைப்பார்..!!
நாயகன் லிங்கு..!!
எளிமையான தோற்றம், சில இடங்களில் நடிக்கக் கஷ்டப் படுவதுபோல் முகம் காட்டினாலும், பாத்திரத்திற்கு இயல்பாகவே பொருந்திப் போகிறார்..!! நாயகியிடம் ஹாஸ்டலில் இரவு புகுந்து வெடிக்கும் போதும், கடைசிக் காட்சிகளிலும் பாஸ்மார்க் வாங்குகிறார்..!!
யாரும் முயற்சிக்காத கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த வசந்த பாலனுக்குப் பாராட்டுக்கள்..!! நாம் தினம் வரும் ஒரு கடையில் இத்தனை விஷயங்கள் நடக்கிறதா என்று சற்று அருகில் இருக்கும் சில தம்பதிகள் பேசிக் கொண்டிருந்தார்கள்..!
உணவுக்காக அடித்துக் கொள்ளும் மெஸ், உறங்கக் கூட இடமில்லா தங்குமிடம்,சூபர்வைசர், அண்ணாச்சி என வெளிப்படும் கொடூரங்கள்..!! மாதாமாதம் மறக்காது அண்ணாச்சியால் கவனிக்கப்படும் அரசுத் துறைகள், அண்ணாச்சிக்குக் காவடி தூக்கும் காவல் துறை, இரவு நேரச் சென்னை, என்று எல்லா விடயங்களிலும் புகுந்து வந்திருக்கிறார் இயக்குநர்..!!
நீண்ட நாட்களுக்குப் பின் நல்லதொரு படம் பார்த்த திருப்தி..!! படம் பார்த்து வெளிவந்ததும் எங்கள் மூவரிடையே ஒரு நீண்ட மௌனம்...!! படம் பாதித்து இருக்கிறது என்று புரிந்தது..!! ஒரு சக நிர்வாகி மெல்ல வாய் திறந்தார்" இப்படித்தான் சார் அந்த ஸ்டோரில் ஒரு பெண்ணை லவ் பண்ணினான்னு ஒருத்தனை அடிச்சே கொன்னுட்டாங்க....!!" "அந்தப் பெண்ணை....................
மொத்தத்தில் நாளை இது போன்ற ஒரு கடையில் வேலை பார்க்கும் சிப்பந்தியை ஏளனமாய் "ஏய்..!! அதை எடுத்துக் கொடு...!! இதை எடுத்துக் கொடு" என்று மிரட்டிக் கொண்டிருக்கும் பல வாடிக்கையாளர்களில் ஒருவரேனும், அவர்கள் மீது இரக்கப் பார்வை பார்த்தார்கள் என்றால் அதுவே இப்படத்துக்கு மிகப் பெரிய வெற்றி..!!
Saturday, February 20, 2010
கடனட்டை என்னும் அட்டைப் பூச்சி
நன்றாய் வைத்தார்கள் கடன் அட்டை credit card என்ற பெயரை...!!! அட்டையைப் போல் உதிரம் உறிஞ்சும் உன்னத தோழனிடம் மாட்டிய அனுபவங்களைச் சொல்லலாம் என்று தான் இந்த பில்டப்..!
இந்தக் கடனட்
டை மாயையை எனக்குத் தோற்றுவித்த அந்தக் குளிர்பான நிறுவன வேலையை எண்ணிப் பார்க்கிறேன்...!!
வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு கோக் விற்றுக் கொண்டிருந்த எனக்கு, ஷாக் கொடுக்கும் வேலையை ஆரம்பித்தது நகர வங்கி தான்..!!
அப்போது நான் கோவையில் வேலை பார்த்து வந்தேன். ஒரு நாளின் மதிய வேளையில், உணவருந்தி விட்டுச் சற்றுப் புகையாடிக் கொண்டிருக்கும் போது, அந்த நகர வங்கியின் வாய்மொழிப் பிரதிநிதியாய் மாறா இனிமையான பெண்குரல் ஒன்று எனது கைபேசி வழியே காதுகளுக்குள் நுழைந்தது...!!
"சார்..!! எங்க சி.... பேங்கோட வேல்யூயபில் க்ஸ்டமர் சார் நீங்க..!! நீங்க மல்டி நேசனல் கம்பெனியில் வேலை பார்க்கறதால், உங்களுக்கு கோல்டு கார்டே கிடைக்கும் சார் ..!! என்று என்னவோ எனக்கு தங்கக் கட்டிகளை தட்டில் அடுக்கிக் கொடுப்பது போல் கலகலவென தமிழும், எளிமையான ஆங்கிலம் கலந்த பேச்சில் விழுந்து, ( அங்க தான் விதி டார்ச்லைட் அடித்தது) , " நான் என்னங்க பண்ணனும்..? என்றேன்..!!" வலையில் சிக்கிய மீனைக் கண்ட மீனவனின் குதூகலத்துடன் அந்தப் பெண்மணி தங்கள் வியாபார இலக்கான என்னை அடகு வைக்கும் வேலையை அழகாக ஆரம்பித்தார்..!!
"நீங்க ஒண்ணுமே பண்ண வேண்டாம் சார்..!! எங்க ரெப்பை அனுப்பறேன்...!! 4 இடத்துல சைன் பண்ணி,ஒரு போட்டோ, அட்ரஸ் ப்ரூப், ஐடி ப்ரூப் மட்டும் கொடுங்க சார் மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன் " என்றார்..!! பக்கத்திலுருந்த நண்பனிடம், "மச்சான்..!! சி. பேங்க் கார்டு தரேன்னு சொல்றாண்டா..!!" என்றேன்..!!
அவன் மாம்ஸ், மிஸ் பண்ணிடாத, சி.. பேங்க்ல லேசுல கார்ட் தரமாட்டாங்க..!! நல்ல சான்ஸ்டா..! என்று சற்றுத் தயங்கிய என்னுள், மின்சாரம் பாய்ச்சினான்..!!
சரி வரச் சொல்லுங்க என்றேன்..!!! வந்து , காட்டும் இடமெல்லாம் கையெழுத்திட்டு, எனக்கு நானே வலை விரித்தேன்...!!!
பத்து நாட்களில் பளபளவென, தங்கக் கலரில் அந்த மனவாயுதம் கூரியரில் வந்து என் பர்ஸில் தஞ்சமடைந்தது..!! தன் தோழர்கள் அனைவரிடமும் அந்த சி.. வங்கிப் பிரதிநிதி..!! " டேய்... ! ஒரு அடிமை சிக்கிருக்காண்டா..!! சொத்தெழுதி வாங்கிருவோம்" என்று சொன்னானோ என்னவோ தெரியவில்லை..!! ஐ.... வங்கி, H...C வங்கி, மாநில வங்கி, AB.... Oவங்கி என தொடர்ந்து படையெடுத்துத்
தங்களது கடனட்டைகளை அள்ளித் தந்தனர்..!!
எத்தனை கடனட்டை இருக்கிறதோ, அத்தனை ஸ்டேட்டஸ் என்ற ஒரு மாயையில் சிக்கினேன்..!!
கோவை குண்டு வெடிப்பு மற்றொரு முறை என் மனதில் அரங்கேறியது..!! பார்ட்டி என்ற வடிவில்..!!!
தொடரும்...!
இந்தக் கடனட்
டை மாயையை எனக்குத் தோற்றுவித்த அந்தக் குளிர்பான நிறுவன வேலையை எண்ணிப் பார்க்கிறேன்...!!வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு கோக் விற்றுக் கொண்டிருந்த எனக்கு, ஷாக் கொடுக்கும் வேலையை ஆரம்பித்தது நகர வங்கி தான்..!!
அப்போது நான் கோவையில் வேலை பார்த்து வந்தேன். ஒரு நாளின் மதிய வேளையில், உணவருந்தி விட்டுச் சற்றுப் புகையாடிக் கொண்டிருக்கும் போது, அந்த நகர வங்கியின் வாய்மொழிப் பிரதிநிதியாய் மாறா இனிமையான பெண்குரல் ஒன்று எனது கைபேசி வழியே காதுகளுக்குள் நுழைந்தது...!!
"சார்..!! எங்க சி.... பேங்கோட வேல்யூயபில் க்ஸ்டமர் சார் நீங்க..!! நீங்க மல்டி நேசனல் கம்பெனியில் வேலை பார்க்கறதால், உங்களுக்கு கோல்டு கார்டே கிடைக்கும் சார் ..!! என்று என்னவோ எனக்கு தங்கக் கட்டிகளை தட்டில் அடுக்கிக் கொடுப்பது போல் கலகலவென தமிழும், எளிமையான ஆங்கிலம் கலந்த பேச்சில் விழுந்து, ( அங்க தான் விதி டார்ச்லைட் அடித்தது) , " நான் என்னங்க பண்ணனும்..? என்றேன்..!!" வலையில் சிக்கிய மீனைக் கண்ட மீனவனின் குதூகலத்துடன் அந்தப் பெண்மணி தங்கள் வியாபார இலக்கான என்னை அடகு வைக்கும் வேலையை அழகாக ஆரம்பித்தார்..!!
"நீங்க ஒண்ணுமே பண்ண வேண்டாம் சார்..!! எங்க ரெப்பை அனுப்பறேன்...!! 4 இடத்துல சைன் பண்ணி,ஒரு போட்டோ, அட்ரஸ் ப்ரூப், ஐடி ப்ரூப் மட்டும் கொடுங்க சார் மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன் " என்றார்..!! பக்கத்திலுருந்த நண்பனிடம், "மச்சான்..!! சி. பேங்க் கார்டு தரேன்னு சொல்றாண்டா..!!" என்றேன்..!!
அவன் மாம்ஸ், மிஸ் பண்ணிடாத, சி.. பேங்க்ல லேசுல கார்ட் தரமாட்டாங்க..!! நல்ல சான்ஸ்டா..! என்று சற்றுத் தயங்கிய என்னுள், மின்சாரம் பாய்ச்சினான்..!!
சரி வரச் சொல்லுங்க என்றேன்..!!! வந்து , காட்டும் இடமெல்லாம் கையெழுத்திட்டு, எனக்கு நானே வலை விரித்தேன்...!!!
பத்து நாட்களில் பளபளவென, தங்கக் கலரில் அந்த மனவாயுதம் கூரியரில் வந்து என் பர்ஸில் தஞ்சமடைந்தது..!! தன் தோழர்கள் அனைவரிடமும் அந்த சி.. வங்கிப் பிரதிநிதி..!! " டேய்... ! ஒரு அடிமை சிக்கிருக்காண்டா..!! சொத்தெழுதி வாங்கிருவோம்" என்று சொன்னானோ என்னவோ தெரியவில்லை..!! ஐ.... வங்கி, H...C வங்கி, மாநில வங்கி, AB.... Oவங்கி என தொடர்ந்து படையெடுத்துத்
தங்களது கடனட்டைகளை அள்ளித் தந்தனர்..!!
எத்தனை கடனட்டை இருக்கிறதோ, அத்தனை ஸ்டேட்டஸ் என்ற ஒரு மாயையில் சிக்கினேன்..!!
கோவை குண்டு வெடிப்பு மற்றொரு முறை என் மனதில் அரங்கேறியது..!! பார்ட்டி என்ற வடிவில்..!!!
தொடரும்...!
Friday, July 17, 2009
அன்புள்ள தோழமைக்கு
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நம்மில் பெரும்பாலானோருக்கு நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் வகையில் உதவ வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. அப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாமிலிருக்கும் ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் ஒரு வாய்ப்பு. ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக உதவி வேண்டி நிற்கின்றனர். நம்மைப்போலவே ஈழச்சொந்தங்களுக்கு உதவும் நோக்கம் கொண்ட சிலர் (நடிகர் சூர்யா, சத்யராஜ், இயக்குனர் மணிவண்ணன் போன்றோர்) அங்குள்ள சில மாணவர்களைத் தத்தெடுத்து அவர்களுக்கான கல்வி மற்றும் அத்தியாவசியச் செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இது நமக்கான பணியாகவும் நம் கண் முன்னே நிற்கிறது. எனவே நமது சமூகப்பணியின் தொடர்ச்சியாக நாம் இப்பணியினை ஏற்று ஒரிரு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது மேற்படிப்புக்கு உதவலாமே என்ற எண்ணம் தோன்றியது. நம் ஆர்குட் தமிழ்க் குழுமமான தமிழக அரசியல் குழுமம்( TNP) நண்பர்கள் சிலருடன் விவாதித்தபோது இதை மிகவும் வரவேற்றனர். இது தொடர்பாக த.நா.அரசியல் குழும நிறுவனர் நண்பர் கோபாலனைத் தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவருக்கும் இத்தகைய எண்ணம் இருப்பதாகக் கூறினர். மேலும், இதன் ஆரம்பமாக ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியைத் தேர்வு செய்து அவர்களது மேற்படிப்புக்கு உதவலாம் என்றும் யோசனை கூறியுள்ளார். அவ்வாறு நாம் உதவும் பட்சத்தில் ஒரு மாணவருக்கு வருடாந்திர கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மற்றும் செலவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதோடு அவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும்வரைத் தொடர்ந்து உதவவெண்டும். சுருக்கமாகக் கூறவேண்டுமானால் நாம் தத்தெடுத்தவுடனேயே அவர்கள் “நமது பிள்ளைகள்” என்றாகிவிடுகின்றனர். எனவே, அவர்களுக்கு முழு உதவியும் செய்ய வேண்டும்.
ஈழத்திற்காக களப்பணியில் நம் தோழர்கள் சிலர் ஈடுபட்டிருக்கையில் கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில் , இந்த ஆண்டில் மேல் நிலை பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்களது மேற்ப்படிப்பை தொடர முடியாத நிலையில்( 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ) இருப்பது தெரியவந்தது ., (கடந்த கல்வியாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் நிறைய பேர் , படிப்பை தொடர முடியாத காரணத்தினால், கட்டட வேலைக்கும்,பெயிண்ட்ர் இன்னும் பலவகை கூலிவேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ..,) அவர்களுக்கு எவ்வகையிலாவது உதவலாம் என்று பல தொண்டு நிறுவங்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கான உதவிகள் கோரப்பட்டுள்ளது .,
நாம் தேர்ந்தெடுத்த பிள்ளைகளின் விபரம்
புவனேசுவரி த/பெ சுப்ரமணியம் , வயது 17 , கும்மிடிபூண்டி.
BE கணினி அறிவியல்
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி
திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்...
நிஜந்தன் த/பெ ரவி, வயது 18 , கும்மிடிபூண்டி
Bsc Bio tech
ஜெயா கலைக் கல்லூரி
திருநின்றவூர்
சென்னை.
இவர்களுக்கான கல்வி கட்டணம்
புவனேசுவரி
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 59,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....
நிஜந்தன்
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 35,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....
குறைந்தது ஆண்டுக்கு 1.5 லட்சம் தேவைப்படுகிறது. நான்கு ஆண்டுகள் என்றால் 6 லட்சம் ரூபாய். பெரியதொகைதான். ஆனால் நம்மில் பலர் ஒன்றாய் இணைந்தால் இது அவரவர் பங்குக்கு சிறு தொகையாகவே வரும். நாம் உறுதியாக நான்கு வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வுதவியை தமிழக அரசியல் குழுமத்தின் மூலம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.
அதை ஒரு அரசு சாராத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றினைத் தொடங்கி அதன் மூலம் இது போன்ற உதவிகளைச் செய்யலாம் என்று எண்ணுகிறோம். அதைத் தொடங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.
அதற்கு முன் கல்லூரிகள் திறக்க இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தமிழக அரசியல் குழும நிர்வாகியான சக்திவேல் அவர்களின்( http://www.orkut.co.in/Main#Profile.aspx?uid=898104197585368552 ) வங்கிக் கணக்கு மூலம் முதலாவது தவணை உதவியைப் பெறலாம் என்று எண்ணுகிறோம். அவரது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விபரம் கீழே:
C Sakthivel
ICICI account no: 620401064769
Branch: Contonment Branch, Trichy
SWIFT CODE: ICICINBB
மேலும் வரைவோலை, மற்றும் பணப்பட்டுவாடா அனுப்புபவர்கள் நண்பர் தயாளனின் விலாசத்திற்கு "C.Sakthivel" என்ற பெயரிலேயே அனுப்பலாம். அவரது விலாசம் கீழே
D. Dhayalan (தொடர்புக்கு : 9841150700)
B/GF, Kasi Arcade Annex-1
32/1, VOC Street
Kaikan Kuppam (Near Chennai Medical Center)
Valasaravakkam - Post
Chennai - 600087
தங்கள் மூலம் ஈழத்துச் சிறார்களின் கல்வி விளக்கேற்ற ஒரு உதவி அது சிறு துளியாய் இருந்தாலும், அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
குறிப்பு:
கும்மிடிப் பூண்டி ஏதிலி முகாமில் இது போன்ற பலர் தங்கள் மேற்கல்விக் கனவுகளோடு, மண் சுமந்து கொண்டும், கலவை கலந்து கொண்டுமிருக்கிறார்கள். தங்களிடம் வைக்கும் வேண்டுகோள் இது தான். தங்களால் ஒரு மாணவனுக்கோ, அல்லது மாணவிக்கோ அவர்களது மேற்கல்விக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் வசதியும், பெரிய மனதும் இருந்தால் தாங்கள் கும்மிடிப்பூண்டி ஏதிலி முகாமைத் தொடர்பு கொள்ளலாம். என்னைத் தாங்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அதன் முகவரியும், தொலைபேசி எண்ணும் வாங்கித் தருகிறேன்.
"அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவினும் புண்ணியங்கோடியாம்
ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்"
என்பார்கள். அதனைச் செயல் படுத்த ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.
உதவி உயருவோம்..!!!!!
எதிர்பார்ப்பு கலந்த நன்றியுடன்
தமிழக அரசியல் குழுமம் சார்பாக
த.சுரேஷ்
பின் குறிப்பு:
இதைத் தங்கள் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
இதைப் பற்றிய விவாதத்தினை காண http://www.orkut.com/Main#CommMsgs.aspx?cmm=7222740&tid=5357422439875434097&start=1
--
C.Sakthivel ( தொடர்புக்கு: 9843283778)
Research Scholar
School of Chemistry
Bharathidasan University
Tiruchirappalli-24, India
E-mail: skvchem@yahoo.com , skvchem@gmail.com
நம்மில் பெரும்பாலானோருக்கு நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் வகையில் உதவ வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. அப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாமிலிருக்கும் ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் ஒரு வாய்ப்பு. ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக உதவி வேண்டி நிற்கின்றனர். நம்மைப்போலவே ஈழச்சொந்தங்களுக்கு உதவும் நோக்கம் கொண்ட சிலர் (நடிகர் சூர்யா, சத்யராஜ், இயக்குனர் மணிவண்ணன் போன்றோர்) அங்குள்ள சில மாணவர்களைத் தத்தெடுத்து அவர்களுக்கான கல்வி மற்றும் அத்தியாவசியச் செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இது நமக்கான பணியாகவும் நம் கண் முன்னே நிற்கிறது. எனவே நமது சமூகப்பணியின் தொடர்ச்சியாக நாம் இப்பணியினை ஏற்று ஒரிரு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது மேற்படிப்புக்கு உதவலாமே என்ற எண்ணம் தோன்றியது. நம் ஆர்குட் தமிழ்க் குழுமமான தமிழக அரசியல் குழுமம்( TNP) நண்பர்கள் சிலருடன் விவாதித்தபோது இதை மிகவும் வரவேற்றனர். இது தொடர்பாக த.நா.அரசியல் குழும நிறுவனர் நண்பர் கோபாலனைத் தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவருக்கும் இத்தகைய எண்ணம் இருப்பதாகக் கூறினர். மேலும், இதன் ஆரம்பமாக ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியைத் தேர்வு செய்து அவர்களது மேற்படிப்புக்கு உதவலாம் என்றும் யோசனை கூறியுள்ளார். அவ்வாறு நாம் உதவும் பட்சத்தில் ஒரு மாணவருக்கு வருடாந்திர கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மற்றும் செலவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதோடு அவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும்வரைத் தொடர்ந்து உதவவெண்டும். சுருக்கமாகக் கூறவேண்டுமானால் நாம் தத்தெடுத்தவுடனேயே அவர்கள் “நமது பிள்ளைகள்” என்றாகிவிடுகின்றனர். எனவே, அவர்களுக்கு முழு உதவியும் செய்ய வேண்டும்.
ஈழத்திற்காக களப்பணியில் நம் தோழர்கள் சிலர் ஈடுபட்டிருக்கையில் கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில் , இந்த ஆண்டில் மேல் நிலை பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்களது மேற்ப்படிப்பை தொடர முடியாத நிலையில்( 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ) இருப்பது தெரியவந்தது ., (கடந்த கல்வியாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் நிறைய பேர் , படிப்பை தொடர முடியாத காரணத்தினால், கட்டட வேலைக்கும்,பெயிண்ட்ர் இன்னும் பலவகை கூலிவேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ..,) அவர்களுக்கு எவ்வகையிலாவது உதவலாம் என்று பல தொண்டு நிறுவங்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கான உதவிகள் கோரப்பட்டுள்ளது .,
நாம் தேர்ந்தெடுத்த பிள்ளைகளின் விபரம்
புவனேசுவரி த/பெ சுப்ரமணியம் , வயது 17 , கும்மிடிபூண்டி.
BE கணினி அறிவியல்
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி
திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்...
நிஜந்தன் த/பெ ரவி, வயது 18 , கும்மிடிபூண்டி
Bsc Bio tech
ஜெயா கலைக் கல்லூரி
திருநின்றவூர்
சென்னை.
இவர்களுக்கான கல்வி கட்டணம்
புவனேசுவரி
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 59,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....
நிஜந்தன்
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 35,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....
குறைந்தது ஆண்டுக்கு 1.5 லட்சம் தேவைப்படுகிறது. நான்கு ஆண்டுகள் என்றால் 6 லட்சம் ரூபாய். பெரியதொகைதான். ஆனால் நம்மில் பலர் ஒன்றாய் இணைந்தால் இது அவரவர் பங்குக்கு சிறு தொகையாகவே வரும். நாம் உறுதியாக நான்கு வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வுதவியை தமிழக அரசியல் குழுமத்தின் மூலம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.
அதை ஒரு அரசு சாராத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றினைத் தொடங்கி அதன் மூலம் இது போன்ற உதவிகளைச் செய்யலாம் என்று எண்ணுகிறோம். அதைத் தொடங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.
அதற்கு முன் கல்லூரிகள் திறக்க இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தமிழக அரசியல் குழும நிர்வாகியான சக்திவேல் அவர்களின்( http://www.orkut.co.in/Main#
C Sakthivel
ICICI account no: 620401064769
Branch: Contonment Branch, Trichy
SWIFT CODE: ICICINBB
Bank code: 6204
மேலும் வரைவோலை, மற்றும் பணப்பட்டுவாடா அனுப்புபவர்கள் நண்பர் தயாளனின் விலாசத்திற்கு "C.Sakthivel" என்ற பெயரிலேயே அனுப்பலாம். அவரது விலாசம் கீழே
D. Dhayalan (தொடர்புக்கு : 9841150700)
B/GF, Kasi Arcade Annex-1
32/1, VOC Street
Kaikan Kuppam (Near Chennai Medical Center)
Valasaravakkam - Post
Chennai - 600087
தங்கள் மூலம் ஈழத்துச் சிறார்களின் கல்வி விளக்கேற்ற ஒரு உதவி அது சிறு துளியாய் இருந்தாலும், அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
குறிப்பு:
கும்மிடிப் பூண்டி ஏதிலி முகாமில் இது போன்ற பலர் தங்கள் மேற்கல்விக் கனவுகளோடு, மண் சுமந்து கொண்டும், கலவை கலந்து கொண்டுமிருக்கிறார்கள். தங்களிடம் வைக்கும் வேண்டுகோள் இது தான். தங்களால் ஒரு மாணவனுக்கோ, அல்லது மாணவிக்கோ அவர்களது மேற்கல்விக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் வசதியும், பெரிய மனதும் இருந்தால் தாங்கள் கும்மிடிப்பூண்டி ஏதிலி முகாமைத் தொடர்பு கொள்ளலாம். என்னைத் தாங்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அதன் முகவரியும், தொலைபேசி எண்ணும் வாங்கித் தருகிறேன்.
"அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவினும் புண்ணியங்கோடியாம்
ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்"
என்பார்கள். அதனைச் செயல் படுத்த ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.
உதவி உயருவோம்..!!!!!
எதிர்பார்ப்பு கலந்த நன்றியுடன்
தமிழக அரசியல் குழுமம் சார்பாக
த.சுரேஷ்
பின் குறிப்பு:
இதைத் தங்கள் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
--
C.Sakthivel ( தொடர்புக்கு: 9843283778)
Research Scholar
School of Chemistry
Bharathidasan University
Tiruchirappalli-24, India
E-mail: skvchem@yahoo.com , skvchem@gmail.com
Thursday, June 18, 2009
மிடில் பெர்த் அவஸ்தை
சில நாட்களுக்கு முன் மதுரைக்கு ஒரு திருமணத்திற்குச் சென்று வரவேண்டியிருந்தது. அதனால் ரயிலில் டிக்கெட் புக் செய்து மிடில் பெர்த் கிடைத்தது. பல நாட்கள் நான் ரயிலில் பயணம் செய்திருந்தாலும், மிடில் பெர்த்தில் பயணம் செய்ததே கிடையாது. அதிக தடவை அப்பர் பெர்த் அல்லது லோயர் பெர்த்தில் தான் பயணம் செய்திருக்கிறேன்.
இந்த முறை தான் மிடில் பெர்த். எல்லா பெர்த்திலும் சுகமானது அப்பர் பெர்த் பயணம் தான். யாருக்கும் சிரமமில்லாமல், சடக்கென்று ஏறி படக் கென்று படுத்துக் கொண்டு முகத்தில் ஒரு துண்டை மூடிக் கொண்டு தூக்கத்தைத் தழுவி விடலாம். லோயர் பெர்த்தைப் பொறுத்த வரை ஒரே சிரமம், நாம் பயணம் செய்யும் பெட்டியில் ஒரு பெரியவர் அல்லது பெரியம்மா இருந்தால் தான் வரும். அவர்களுக்கு அப்பர் பெர்த் புக் ஆகியிருக்கும்.யார்டா மாட்டுவார்கள் என்று பரிதாபமாய்க் காத்து இருப்பார்கள். வேறு வழியில்லாமல் அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால் இந்த மிடில் பெர்த் இருக்கே மிடில் பெர்த், ரொம்பக் கொடுமைங்க..!!!
அன்னிக்குத் தான் அதை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைச்சது.
மொத்தம் ஐந்து பேர் இருந்தோம். கிடைச்ச டிக்கெட்டில் 4 பேர் அருகருகேயும், ஒரே ஒருத்தர் அந்தக் கடைசியிலும் இடம் இருந்தது. சரி அங்கு இருப்பவர்களிடம் பேசி யாராவது ஒருத்தரை மாத்திடலாம் என்று திட்டமிட்டுப் போனோம். எங்களைத் தவிர ஒரே ஒரு அழகான பெண். மற்ற எல்லாரும் குடும்ப உறுப்பினர்கள். (3+3+சைடு பெர்த் 3=9 சீட்). குடும்ப உறுப்பினர்கள் மொத்தமாய் மறுத்து விடவே , வேற வழியே இல்லாமல், இருந்த அந்த ஒரே ஒரு அழகான பெண்ணைப் பரிதாபமாகப் பார்த்தோம். அவரும் நிலையை உணர்ந்து, no problem என்று கண்ணியமாக நாங்கள் சுட்டிக் காட்டிய இடத்தில் அமர்ந்து கொண்டார்.
அப்புறம் தான் தெரிந்தது, அந்தப் பெண் மிடில் பெர்த் என்று. அதற்குள் மற்ற நண்பர்கள் மற்ற இடங்களை ஆக்கிரமிக்க, மீதி இருந்த மிடில் பெர்த்தில் இடம் பெயர்ந்தேன். மெதுவாக பாம்பு போல் நெளிந்து உள்ளே நுழைந்த உடன் படுக்க வேண்டும். படுக்க மட்டுமே வேண்டும் உட்கார முடியாது. உட்கார்ந்தால் தலை மேலே முட்டும். சரி என்று படுத்துக் கொண்டேன். சற்று நேரத்தில் தண்ணீர் தாகம் எடுத்தது. எழுந்தேன். பட்டென்று ஒரு இடி தலையில். மேலிருந்த நண்பர் பார்த்து முறைத்தார். தண்ணீர் பாட்டிலை எடுத்து தூக்கிக் கூட முடியவில்லை. தண்ணீர் குடிக்க வேண்டி மிடில் பெர்த்தில் இருந்து கீழே இறங்க வேண்டியிருந்தது. பின் மறுபடியும் சைடில் ஏறி பாம்பு போல் ஊர்ந்து அப்பாடா என்று படுத்தேன். சற்று கண்ணயர்ந்து மெல்லக் காலை நீட்டிய ஐந்தாவது நிமிடம் ஒருவர் எக்ஸ்கியூஸ்மீ..!! காலைக் கொஞ்சம் உள்ள எடுங்க..!! என்று முரட்டுத்தனமாகக் காலை ஆட்டி என்னை எழுப்பி அன்பாய் வேண்டுகோள் விடுத்தார். அவ்வளவு தான் தூக்கம் காலி..!!! ஒரு ஐந்து நிமிடம் சீட்டை விட்டு இறங்கி பெட்டியின் இரண்டு பக்கமும் ஒரு நடை நடந்து விட்டு மறுபடியும் பாம்பானேன். இரண்டு கால்களையும் மடித்து சம்மணிட்டு உறங்குவது போல் மடித்தவாறே உறங்க ஆரம்பித்தேன். அதிகாலை 4 மணியிருக்கும். கீழ் பெர்த்தில் இருந்த பெரியவர்கள் இருவரும் எழுந்து விட்டனர். மிடில் பெர்த்தில் இருந்த என்னைத் த்ட்டி எழுப்பி, தம்பி நாங்க கொஞ்சம் உட்காரணும், பெர்த்தைக் கீழே இறக்குங்க என்றார்கள். நானும் பரிதாபமாய், சார் மணி இப்பத்தான் 4 ஆவுது. மதுரை வர இன்னும் இரண்டு , இரண்டரை மணிநேரம் இருக்கே சார்..!! என்றேன். இல்ல தம்பி நாங்க திண்டுக்கலில் இறங்கிடுவோம். அப்போதைக்கு எந்திரிக்க முடியாது, திண்டுக்கல் வந்தது நீங்க கீழ் பெர்த்ல படுத்துக்கங்க என்று ஆறுதலளித்து விட்டு அவர்கள் கதையைப் பேசத் தொடங்கினார்கள். சரி என்று விதியை நொந்த படி மெதுவாய்ச் சாய்ந்து உட்கார்ந்த படியே தூங்க ஆரம்பித்தேன். நானும் திண்டுக்கலில் இறங்கவேண்டியிருப்பதால் அவர்களின் ஆறுதல் வார்த்தை என்னிடம் பலிக்கவில்லை.
தூக்கமற்ற கண்களைக் கசக்கியவாறே சைடு பர்த்தைப் பார்த்தேன். எனக்குச் சிரிப்பு வந்தது. என் நண்பர்களில் என்னை விடச் சற்று தடித்த நண்பன், அதே மிடில் பெர்த்தில் (சைடு மிடில் பெர்த் நரகமுங்க..!!) இறங்க வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாக திண்டுக்கல் இறங்கி, வத்தலக் குண்டு வந்து, நண்பர் திருமணத்தில் கலந்து கொண்டேன். 5 நண்பர்களில் மூவர் கொடைக் கானல் செல்ல ஏற்கனவே திட்டமிட்டதால், மீதி இருவர் மட்டுமே மீண்டும் சென்னை திரும்ப வேண்டும். இரவு 7 மணிக்கு வண்டி. ஆறு மணிக்கு டிராவல் ஏஜெண்ட் எனது கைபேசியில் சீட்டுக்களை உறுதி செய்தார். 46 49 என்று.
சரி இப்போது செல்லும் போதாவது நிம்மதியாகத் தூங்கும் படி அப்பர் பெர்த் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றோம். வண்டியில் ஏறி எண்களைத் தேடிப் பார்த்தோம். இரண்டுமே................. மிடில் பெர்த்...!!
இந்த முறை தான் மிடில் பெர்த். எல்லா பெர்த்திலும் சுகமானது அப்பர் பெர்த் பயணம் தான். யாருக்கும் சிரமமில்லாமல், சடக்கென்று ஏறி படக் கென்று படுத்துக் கொண்டு முகத்தில் ஒரு துண்டை மூடிக் கொண்டு தூக்கத்தைத் தழுவி விடலாம். லோயர் பெர்த்தைப் பொறுத்த வரை ஒரே சிரமம், நாம் பயணம் செய்யும் பெட்டியில் ஒரு பெரியவர் அல்லது பெரியம்மா இருந்தால் தான் வரும். அவர்களுக்கு அப்பர் பெர்த் புக் ஆகியிருக்கும்.யார்டா மாட்டுவார்கள் என்று பரிதாபமாய்க் காத்து இருப்பார்கள். வேறு வழியில்லாமல் அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால் இந்த மிடில் பெர்த் இருக்கே மிடில் பெர்த், ரொம்பக் கொடுமைங்க..!!!அன்னிக்குத் தான் அதை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைச்சது.
மொத்தம் ஐந்து பேர் இருந்தோம். கிடைச்ச டிக்கெட்டில் 4 பேர் அருகருகேயும், ஒரே ஒருத்தர் அந்தக் கடைசியிலும் இடம் இருந்தது. சரி அங்கு இருப்பவர்களிடம் பேசி யாராவது ஒருத்தரை மாத்திடலாம் என்று திட்டமிட்டுப் போனோம். எங்களைத் தவிர ஒரே ஒரு அழகான பெண். மற்ற எல்லாரும் குடும்ப உறுப்பினர்கள். (3+3+சைடு பெர்த் 3=9 சீட்). குடும்ப உறுப்பினர்கள் மொத்தமாய் மறுத்து விடவே , வேற வழியே இல்லாமல், இருந்த அந்த ஒரே ஒரு அழகான பெண்ணைப் பரிதாபமாகப் பார்த்தோம். அவரும் நிலையை உணர்ந்து, no problem என்று கண்ணியமாக நாங்கள் சுட்டிக் காட்டிய இடத்தில் அமர்ந்து கொண்டார்.
அப்புறம் தான் தெரிந்தது, அந்தப் பெண் மிடில் பெர்த் என்று. அதற்குள் மற்ற நண்பர்கள் மற்ற இடங்களை ஆக்கிரமிக்க, மீதி இருந்த மிடில் பெர்த்தில் இடம் பெயர்ந்தேன். மெதுவாக பாம்பு போல் நெளிந்து உள்ளே நுழைந்த உடன் படுக்க வேண்டும். படுக்க மட்டுமே வேண்டும் உட்கார முடியாது. உட்கார்ந்தால் தலை மேலே முட்டும். சரி என்று படுத்துக் கொண்டேன். சற்று நேரத்தில் தண்ணீர் தாகம் எடுத்தது. எழுந்தேன். பட்டென்று ஒரு இடி தலையில். மேலிருந்த நண்பர் பார்த்து முறைத்தார். தண்ணீர் பாட்டிலை எடுத்து தூக்கிக் கூட முடியவில்லை. தண்ணீர் குடிக்க வேண்டி மிடில் பெர்த்தில் இருந்து கீழே இறங்க வேண்டியிருந்தது. பின் மறுபடியும் சைடில் ஏறி பாம்பு போல் ஊர்ந்து அப்பாடா என்று படுத்தேன். சற்று கண்ணயர்ந்து மெல்லக் காலை நீட்டிய ஐந்தாவது நிமிடம் ஒருவர் எக்ஸ்கியூஸ்மீ..!! காலைக் கொஞ்சம் உள்ள எடுங்க..!! என்று முரட்டுத்தனமாகக் காலை ஆட்டி என்னை எழுப்பி அன்பாய் வேண்டுகோள் விடுத்தார். அவ்வளவு தான் தூக்கம் காலி..!!! ஒரு ஐந்து நிமிடம் சீட்டை விட்டு இறங்கி பெட்டியின் இரண்டு பக்கமும் ஒரு நடை நடந்து விட்டு மறுபடியும் பாம்பானேன். இரண்டு கால்களையும் மடித்து சம்மணிட்டு உறங்குவது போல் மடித்தவாறே உறங்க ஆரம்பித்தேன். அதிகாலை 4 மணியிருக்கும். கீழ் பெர்த்தில் இருந்த பெரியவர்கள் இருவரும் எழுந்து விட்டனர். மிடில் பெர்த்தில் இருந்த என்னைத் த்ட்டி எழுப்பி, தம்பி நாங்க கொஞ்சம் உட்காரணும், பெர்த்தைக் கீழே இறக்குங்க என்றார்கள். நானும் பரிதாபமாய், சார் மணி இப்பத்தான் 4 ஆவுது. மதுரை வர இன்னும் இரண்டு , இரண்டரை மணிநேரம் இருக்கே சார்..!! என்றேன். இல்ல தம்பி நாங்க திண்டுக்கலில் இறங்கிடுவோம். அப்போதைக்கு எந்திரிக்க முடியாது, திண்டுக்கல் வந்தது நீங்க கீழ் பெர்த்ல படுத்துக்கங்க என்று ஆறுதலளித்து விட்டு அவர்கள் கதையைப் பேசத் தொடங்கினார்கள். சரி என்று விதியை நொந்த படி மெதுவாய்ச் சாய்ந்து உட்கார்ந்த படியே தூங்க ஆரம்பித்தேன். நானும் திண்டுக்கலில் இறங்கவேண்டியிருப்பதால் அவர்களின் ஆறுதல் வார்த்தை என்னிடம் பலிக்கவில்லை.
தூக்கமற்ற கண்களைக் கசக்கியவாறே சைடு பர்த்தைப் பார்த்தேன். எனக்குச் சிரிப்பு வந்தது. என் நண்பர்களில் என்னை விடச் சற்று தடித்த நண்பன், அதே மிடில் பெர்த்தில் (சைடு மிடில் பெர்த் நரகமுங்க..!!) இறங்க வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாக திண்டுக்கல் இறங்கி, வத்தலக் குண்டு வந்து, நண்பர் திருமணத்தில் கலந்து கொண்டேன். 5 நண்பர்களில் மூவர் கொடைக் கானல் செல்ல ஏற்கனவே திட்டமிட்டதால், மீதி இருவர் மட்டுமே மீண்டும் சென்னை திரும்ப வேண்டும். இரவு 7 மணிக்கு வண்டி. ஆறு மணிக்கு டிராவல் ஏஜெண்ட் எனது கைபேசியில் சீட்டுக்களை உறுதி செய்தார். 46 49 என்று.
சரி இப்போது செல்லும் போதாவது நிம்மதியாகத் தூங்கும் படி அப்பர் பெர்த் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றோம். வண்டியில் ஏறி எண்களைத் தேடிப் பார்த்தோம். இரண்டுமே................. மிடில் பெர்த்...!!
Thursday, June 11, 2009
மோதலில் விழுந்தேன் மூன்றாம் பாகம்
அப்ரூவல் மறுநாள் மதியம் 3 மணிக்குத்தான் வந்தது. ஆனால் ஒரு லட்சத்துக்கு அனுப்பிய அப்ரூவலுக்கு வெறும் ஐம்பதாயிரம் தான் அனுமதி கிடைத்தது. உடனே அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் நேரம் குறித்தார்.
இரவு ஒன்பது மணிக்கு அறுவை சிகிச்சை அரங்கிற்கு( அதாங்க ஆப்ரேஷன் தியேட்டர்) அழைத்துச் செல்லப் பட்டேன். கை நரம்பில் ஒரு ட்யூப் செருகி அதில் ஒரு ஊசியை நுழைத்தார், அடுத்த நொடியே அரை மயக்க நிலைக்குச் சென்றேன். ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் உணர்ச்சியற்ற நிலை. சற்று நேரத்தில் முற்றிலும் மயக்கமடைந்தேன். மறுபடி கண் விழித்த போது, எதோ சக்கரக் கட்டிலில் அழைத்துச் செல்லப் பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது சுற்றிலும் நண்பர்கள் , அம்மா, மாமா எல்லோரும் நிற்பது போன்ற ஒரு நிழலுருவாய்த் தோன்றியது. ஆனாலும் முழு நினைவாய்த் தெரியவில்லை. ஒரு முழுதும் குளிரூட்டப்பட்ட பெரிய அறையின் ஒரு மூலையில் இருக்கும் படுக்கைக்கு அழைத்துச் செல்லப் பட்டேன்
இரவு ஒன்பது மணிக்கு அறுவை சிகிச்சை அரங்கிற்கு( அதாங்க ஆப்ரேஷன் தியேட்டர்) அழைத்துச் செல்லப் பட்டேன். கை நரம்பில் ஒரு ட்யூப் செருகி அதில் ஒரு ஊசியை நுழைத்தார், அடுத்த நொடியே அரை மயக்க நிலைக்குச் சென்றேன். ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் உணர்ச்சியற்ற நிலை. சற்று நேரத்தில் முற்றிலும் மயக்கமடைந்தேன். மறுபடி கண் விழித்த போது, எதோ சக்கரக் கட்டிலில் அழைத்துச் செல்லப் பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது சுற்றிலும் நண்பர்கள் , அம்மா, மாமா எல்லோரும் நிற்பது போன்ற ஒரு நிழலுருவாய்த் தோன்றியது. ஆனாலும் முழு நினைவாய்த் தெரியவில்லை. ஒரு முழுதும் குளிரூட்டப்பட்ட பெரிய அறையின் ஒரு மூலையில் இருக்கும் படுக்கைக்கு அழைத்துச் செல்லப் பட்டேன்
Subscribe to:
Posts (Atom)